வால்பாறை: வால்பாறை அருகே, காட்டுயானையை படம் எடுத்தவர்களை விரட்டியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது சோலையார் எஸ்டேட். இங்குள்ள எலுமிச்சை மரம் தேயிலை தோட்டத்தில், நேற்றுமுன்தினம் காலை ஒரு குட்டியுடன் நான்கு யானைகள் முகாமிட்டன. இப்பகுதியில் வனத்துறையினர் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை.இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வாலிபர்கள் சிலர், யானையின் மிக அருகில் நின்று மொபைல்போன் மூலம் போட்டோ எடுக்க துவங்கினர்.சிறிது நேரம் அமைதியாக இருந்த யானைகள் கூட்டம், திடீரென்று படம் எடுக்க முயன்றவர்களை விரட்டத் துவங்கியது. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தூரத்தில் நின்று யானையை பார்த்தவர்கள், அவர்களை மேலே வரச்சொல்லி கூச்சலிட்டனர்.இருப்பினும், வாலிபர்கள் யானையை தொடர்ந்து படம் எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். ஒரு வழியாக யானைகளை தாமாகவே அருகில் உள்ள துண்டு சோலைக்கு மறைந்து கொண்டதையடுத்து வாலிபர்கள் அங்கிருந்து "எஸ்கேப்' ஆகினர்.
"அதிகாரி வீட்டைசேதப்படுத்திய யானைகள்'வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா(டேன்டீ) லாசன் டிவிஷன். இங்கு குட்டியுடன் வந்த ஒன்பது யானைகள் இங்குள்ள ரேஷன் கடையை இடித்தன. பின்னர் பீல்டு ஆபீசர் ராமன் என்பவரின் வீட்டின் சுவற்றை இடித்து, உள்ளே இருக்கும் பொருட்களை சேதப்படுத்தின. அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதனிடையே, காட்டுயானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் அவை வரும் பாதையில் தீயை போட்டு குளிர் காய்ந்தனர். ஆனால் யானைகள் அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, வேறு வழியாக எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, வீடு மற்றும் கடைகளை இடித்து சேதப்படுத்தின.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.