திருவண்ணாமலை: வாய் பேச முடியாத சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அடுத்த கல்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தி,17,(பெயர் மாற்றப்பட்டுள்ளது), வாய் பேச முடியாத மன நலம் பாதிக்கப்பட்ட பெண். இவர் இவரது எதிர் வீட்டில் வசிக்கும் சுதா என்பவரது வீட்டுக்கு சென்று படம் வரைந்து விளையாடுவது வழக்கம்.நேற்று முன்தினம், 23ஆம் தேதி மாலை சுதா வீட்டுக்கு சென்று விளையாடினார். இரவு நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால், அவரது தந்தை அங்கு சென்று பார்த்தார். அதற்கு சுதா ஏற்கனவே உங்களது மகள் வீட்டுக்கு சென்று விட்டார் என கூறியுள்ளார்.அப்போது, அதே பகுதியில் உள்ள கோபால், 35, என்பவரது வீட்டிலிருந்து சாந்தி நடக்க முடியாமல் அழுது கொண்டு வெளியே வருவதை பார்த்த அவரது தந்தை அதிர்ச்சி அடைந்தார். கோபால் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக தனது தந்தையிடம் கூறி இளம்பெண் கதறி அழுதார்.
இது குறித்து கண்ணமங்கலம் போலீஸார் விசாரித்து தலைமறைவான கோபாலை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.