மீரட்: சீனாவால் மட்டுமல்ல இந்தியாவைச் சுற்றியுள்ள நான்கு திசைகளில் இருந்து இந்தியாவிற்கு ஆபத்து அதிகரித்துவருகிறது என ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் கூறினார். உத்திரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள மாதவ்கஞ்ச் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மூன்றுநாள் முகாம் நடந்தது.
முகாமில் இறுதிநாளான நேற்று கொண்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் பேசியதாவது: சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் நம் நாட்டிற்கு பெரும் ஆபத்து தான். சீனா மட்டுமல்ல அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் உள்ளிட்ட நாலாபுறங்களிலும் இந்தியா பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. இதனை ஒரு போதும் விட்டுவைக்க கூடாது. இந்நாடுகள் இந்தியாவிற்கு எதிராக போர்க்குணத்துடன் உள்ளன.
டில்லியில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டிற்கு துயரமான ஒன்றை ஏற்படுத்திவிட்டது. தலைநகருக்கு இப்படி களங்கம் ஏற்பட்டது வேதனை அளிக்கிறது. இதிலிருந்து டில்லிநகரில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு மோகன்பாகவத் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சகிப்பு தன்மை இல்லாத ஹிந்துக்கள் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார் இங்கு எந்த மதத்தவர், மதிக்க படவில்லை? வழிபாட்டு சுதந்திரம் வழங்க படவில்லை? சுதந்திரம் பெற்றபோது இந்தியாவை விட்டு பாகிஸ்தான் சென்றவர்கள் இன்று அதற்காக வருந்துகிறார்கள் மற்ற மதத்தினருக்காக சலுகைகளையும், இட ஒதுக்கீடு களையும், தனி சட்டங்களையும், இன்ன பிற சலுகைகளையும் வேறு எங்காவது காண முடியுமா? ஒரு கிறிஸ்தவர், ஜைனர், அல்லது இந்து சவூதி அரேபியாவில் எந்த விசேஷ சலுகைகளை பெறுகிறார்? முடிந்தால் தாராளமாக குடியேறட்டும் யாரும் தடுக்க வில்லை ஒரு தீவிர வாதத்திற்கு எதிராக, நடவடிக்கை எடுக்காவிட்டால், "ஐயோ முதுகெலும்பே இல்லாத மனிதர்கள்" என்று கூப்பாடு போடுவது நடவடிக்கை எடுத்தால் "ஐயோ பாவம், மைனாரிட்டி மீது நடவடிக்கையா" என்ற கூக்குரல் என்னதான் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.