யாங்கூன்: மியான்மர் நாட்டில், கடும் பனி மூட்டம் காரணமாக, பயணிகள் விமானம், ஓடு பாதையில் இறங்குவதற்கு பதில், நெடுஞ்சாலையில் இறங்கியதால், விபத்துக்குள்ளானது. இதில், மூன்று பேர் பலியாயினர். 11 பேர், படுகாயமடைந்தனர்.மியான்மர் நாட்டில், ஷான் மாகாணத்தில் உள்ள, இன்லி ஏரியின் அழகை ரசிப்பதற்காக, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.மண்டாலே நகரிலிருந்து, "ஏர் பாகன்' என்ற தனியார் விமானம், 69 பேருடன், ஹெகோ நகருக்கு புறப்பட்டது. கடும் பனி மூட்டத்தால், ஹெகோ விமான நிலையத்தில் தரையிறங்க விமானம் திணறியது. ஒரு கட்டத்தில் இந்த விமானம், விமான நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் தட்டு தடுமாறி தரையிறங்கியதில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.நெடுஞ்சாலையில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர், விமானம் விழுந்ததில் பலியானார். விமானத்தில் இருந்த சுற்றுலா வழிகாட்டியும், மியான்மர் நாட்டு சிறுவனும் விபத்தில் உயிரிழந்தனர். அமெரிக்கா, பிரிட்டன், கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த, 11 பேர் படுகாயமடைந்தனர்.இந்த விமானத்தில், 51வெளிநாட்டு பயணிகள் உள்பட, 63 பேரும், விமான ஊழியர்கள் ஆறு பேரும் இருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.