இஸ்லாமாபாத்; தனது பேச்சை கேட்காமல், விவாகரத்து செய்த, மாஜி மனைவியின் முகத்தை அறுத்த, நபரை போலீசார் தேடிவருகின்றனர்.பாகிஸ்தானின், பைசலாபாத்தை சேர்ந்தவர் ரசூல். இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன், சஜிதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால், இவரது குடிபழக்கத்தினால், மனம் வெறுத்த, சஜிதா, ரசூலை, கடந்த ஆண்டு விவாகரத்து செய்து விட்டார்.இதனால், கோபமடைந்த ரசூல், தனது நண்பர்களுடன் சேர்ந்து, சஜிதாவை கடத்தி சென்று, அவரது கைகளை கட்டி போட்டு, மூக்கை துண்டித்து, ஓடி விட்டார். வலியால் துடித்த சஜிதாவை, அப்பகுதியில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.ரசூலை, போலீசார் தேடி வருகின்றனர்.காதலி, மனைவி, மற்றும் காதலனுடன் செல்லும் தங்கை ஆகியோரின் மீது திராவகம் வீசுவது, மூக்கை சிதைப்பது என்பது பாகிஸ்தானில் சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.