கோழிக்கோடு : கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மாணவி, 60க்கும் மேற்பட்ட, கர்நாடக இசை கச்சேரிகளை நடத்தி, இசை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
கேரள மலப்புரம் மாவட்டம், வடக்கன்கரா என்ற இடத்தை சேர்ந்த, கருவட்டில் யாசிர் - சகீரா தம்பதியின் மகள், ஹன்னா யாசிர். மலப்புரத்தில் உள்ள, மேல் நிலை பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், கேரளா மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும், 60க்கும் மேற்பட்ட, கர்நாடக இசை கச்சேரிகளில் பாடியுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக, கர்நாடக இசை பயின்று வரும் இந்த முஸ்லிம் மாணவி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கர்நாடக இசை கச்சேரிகளில் பாடி வருகிறார். பாரம்பரிய முஸ்லிம் பெண் போல, முகத்தை மட்டும் வெளியே காட்டியவாறு, மேடைகளில், கீர்த்தனைகளையும், ஆலாபனைகளையும் அருமையாக இசைத்து, இசை ரசிகர்களை மகிழ்ச்சியூட்டி வருகிறார்.
""இசைக்கு முன், மதம் கிடையாது; நான் முஸ்லிமாக இருப்பதால், எனக்கு, கர்நாடக இசை பாடல்களை கற்பதிலும், பாடுவதிலும் எந்த கஷ்டமும் இல்லை. அதுபோல, முஸ்லிம் உடையில் மேடையில் தோன்றுவதில் எந்த சிரமமும் இல்லை; என் ரசிகர்களுக்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை,'' என்கிறார், இந்த மாணவி.கர்நாடக இசை மட்டுமின்றி, கிறிஸ்தவ பாடல்களையும், முஸ்லிம் மத வழிபாட்டு பாடல்களையும் கற்று தேர்ந்துள்ள ஹன்னா, கேரள மாநிலத்தின் இசை குயிலாக பாராட்டப்படுகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாற்று மதத்தை சார்ந்த சிலர் (குறிப்பாக பெயர் தாங்கிகள்) தான் சார்ந்த ஹிந்து மதத்தின் எதையாவது ஒன்றை செய்து விட்டால்... தினமலருக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி. அச்செய்தியை தன்னுடைய எல்லா இதழ்களிலும் வெளிவரச்செய்து மிகைப்படுத்தி ஊதிப் பெரிதாக்கி விடும் பாணியே.... தனிதான்.
இவரை பொறுத்த வரை பாடுவது ஒரு தொழில் அல்லது தனி நபர் விருப்பம். இதற்க்கும் ஜெய்ஹிந்த் என்று ஒன்று படுவதற்கும் என்ன சம்பந்தம்? இசை பிடிக்காதவர்கள் இந்தியர்கள் இல்லையா? "இசைக்கு முன், மதம் கிடையாது" என்று கூறுவதே ஒருவரின் மத நம்பிக்கையை பின்னுக்கு தள்ளி விட்டது.
பாடுவதை பொறுத்த மட்டில் சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியை வழங்கி இருக்கின்றது. அதில் முதல் நிபந்தனையே இறைவனுக்கு இணைவைத்தல் இருக்க கூடாது.
கீர்த்தனை, கிருத்துவ பாடல்கள் எவ்வகையை சார்ந்தது? அடிப்படையே ஆட்டம் கண்டு விட்டால் மற்றவைகள் (ஹிஜாப்) .... ?
"இத ..இதத்தான் ...எதிர்பார்க்கிறோம்" - ஒரு தனி மதம் சம்பந்த பட்ட (இறை நிராகரிப்பு) கீர்த்தனைகளை பஜனைகளை மாற்று மதத்தினர் (குறிப்பாக ஓரிறை கொள்கையினர்) பாடுவதன் மூலம் தான் 'இந்தியன் என்ற சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும்' அடைய முடியுமா அல்லது அதற்கான அளவுகோல் தான் இது போன்ற செயல்களா? பிற சமுதாயத்தினரிடம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் எப்படி பேணி பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லித்தந்ததை விடவா புதிதாக நாம் கூறப் போகின்றோம் ?
எத்தனை காலம் தான் இப்படியே கூறித்திரிய போகின்றோம். நம் தேசத்தில் மதமே இல்லையென்று கூறும் சகோதரர்கள் கூட இருக்கிறார்கள். மத நல்லிணக்கம் என்பதனை விட சமூக நல்லிணக்கத்திற்கு வழிவகுப்போம். பிற மொழி மத இன கலாச்சாரத்தை நடைமுறை படுத்துகின்றோம் என்ற பெயரில்... அந்நிய மண்ணில் (Ex :அமெரிக்கா) தன் தாய்நாட்டின் தனித்துவத்தை தொலைத்தது எத்தனை பேர் ?
எல்லா மதத்தினரையும் மதத்தை சாராதவரையும் மதித்து மனித நேயம் பேணுவோம். பொதுவான நன்மையான விசயங்களில் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். அதுவே (சமூக நல்லிணக்கமே) வளமான இந்தியாவை உருவாக்கும் பலமான ஆயுதம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.