Advertisement
முதல்வர் ஷீலா தீட்சித் - டில்லி போலீஸ் அதிகாரிகள் இடையே மோதல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,23:52 IST

புதுடில்லி :மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக, டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்துக்கும், டில்லி போலீசாருக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. "மாணவியிடம், மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றபோது, போலீஸ் உயதிரகாரிகள், தேவையின்றி குறுக்கீடு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேக்கு, முதல்வர் ஷீலா கடிதம் எழுதியுள்ளார்.

டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில், திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், டில்லி போலீசார் மீது, காங்., மூத்த தலைவரும், டில்லி முதல்வருமான, ஷீலா தீட்ஷித், துவக்கத்திலிருந்தே, குற்றம் சாட்டி வந்தார்.டில்லியை பொறுத்தவரை, போலீஸ் துறை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை; மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், "பிரச்னைக்கு, போலீசாரின் கவனக் குறைவே காரணம்' என, ஷீலா, புகார் கூறி வந்தார்.

கடிதம்:



இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேவுக்கு, ஷீலா தீட்ஷித் எழுதிய கடிதம், மீடியாக்களுக்கு கிடைத்துள்ளது.
அதில் அவர் கூறியுள்ளதாவது: பாதிக்கப்பட்ட மாணவியிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, டில்லி சப் - டிவிஷனல் மாஜிஸ்திரேட், உஷா சதுர்வேதி, 21ம் தேதி இரவு, மருத்துவமனைக்கு சென்றார். அவருடன், போலீஸ் அதிகாரிகளும் சென்றுள்ளனர். மாணவியின் குடும்பத்தார் தடுத்தும் கூட, வாக்குமூலம் அளிப்பதை, போலீசார், வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெறும்போது, போலீசாரும் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மாஜிஸ்திரேட், குறிப்பிட்ட கேள்விகளை, மாணவியிடம் கேட்டபோது, போலீசார், தாங்கள் தயாரித்து வைத்திருந்த கேள்விகளை கொடுத்து, அந்த கேள்விகளை கேட்கும்படி, அவரை வற்புறுத்தியுள்ளனர்.

நடவடிக்கை இல்லை:



மாஜிஸ்திரேட், இதற்கு மறுப்பு தெரிவித்தபோது, அவரை, விமர்சித்துள்ளனர். வாக்குமூலம் பெறும் போது, தேவையின்றி, மூன்று உயர் போலீஸ் அதிகாரிகள், குறுக்கீடு செய்துள்ளனர்.

இதுகுறித்து, மாஜிஸ்திரேட், என்னிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, டில்லி உதவி போலீஸ் கமிஷனரிடம், பேசினேன். அவரிடமிருந்து, சரியான நடவடிக்கை இல்லை.எனவே, மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெறும்போது, போலீஸ் உயரதிகாரிகள் குறுக்கீடு செய்தது தொடர்பாக, உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில், ஷீலா தீட்ஷித் கூறியுள்ளார்.

பதிலடி:



இதற்கு, டில்லி போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். டில்லி போலீசாரின் செய்தி தொடர்பாளர், ராஜன் பகத் கூறியதாவது:முதல்வர் ஷீலா தீட்ஷித், உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம், மீடியாக்களுக்கு கசிந்தது எப்படி? இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாஜிஸ்திரேட், வாக்குமூலம் பெற வந்தபோது, அவருடன் வீடியோ கேமராமேன்களும் வந்தனர்.அவர்களை மீடியாக்காரர்கள் என, நினைத்து, மாணவியின் குடும்பத்தினர் தடுத்தனர். "வாக்குமூலம் பெறும்போது, இதுபோல் வீடியோ எடுப்பது, வழக்கமான நடைமுறை தான்' என, அவர்களுக்கு எடுத்துக் கூறினோம்.மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றபோது, போலீசார் யாரும், அந்த அறையில் இல்லை. பாதிக்கப்பட்ட மாணவியே, வாக்குமூலம் பெற்ற, அனைத்து பக்கங்களிலும், கையெழுத்திட்டார். வாக்குமூலத்தின் போது, போலீசார், அதில் குறுக்கிடவே இல்லை.இவ்வாறு ராஜன் பகத் கூறினார்.இந்த விவகாரத்தில், டில்லி போலீசாருக்கும், முதல்வருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டில்லி மாஜிஸ்திரேட் சார்பில், பாதிக்கப் பட்ட மாணவியிடம், நேற்று மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டது.இதற்கிடையே, மாணவி கற்பழிப்பு விவகாரத்தில், போலீசார் கவனக்குறைவாக செயல்பட்டது குறித்து, டில்லி ஐகோர்ட் நீதிபதி, உஷா மெக்ரா தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (23)
meekannan - Chennai,இந்தியா
26-டிச-201218:52:45 IST Report Abuse
meekannan பரவாயில்லையே டெல்லியில் போலீஸ் மாஜிஸ்ரேட்டை வற்புறுத்தும் அளவு அதிகாரம் இருக்கிறதா? இதில் ஒரு சதம் தமிழ்நாடு போலீஸ்சுக்கு இருந்திருந்தா இங்கு சட்டம் ஒழுங்கு சீரடைங்சிருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
SURESH GOPALAN - maputo.,மொசம்பிகா
26-டிச-201216:50:33 IST Report Abuse
SURESH GOPALAN உருப்படுமாயா இந்த நாடு? பெண் பாவம் பொல்லாதது ,இந்த கிராதகர்களுக்கு நாலு தெரு சந்திக்கும் இடத்தில கழுவுல சொருகணும். இல்லையா ,சர்க்கரை பாகை கரச்சு உடம்பு பூரா தடவி கை காலை கட்டி கருப்பு கட்டெறும்ப விடனும்.அப்போ தெரியும் உயிர் போற வேதனைன என்னன்னு ...சுரேஷ்கோபாலன்,மொசாம்பிக்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
KMP - குட்டி ஜப்பான் ,இந்தியா
26-டிச-201215:41:13 IST Report Abuse
KMP பொறுப்புள்ள இவர்கள் இப்படி சண்டை போட்டுக்கொண்டால் இது போன்ற குற்றத்தை எதிர்காலங்களில் எவ்வாறு தடுப்பது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
tamilaa thamila - chennai,இந்தியா
26-டிச-201213:42:11 IST Report Abuse
tamilaa thamila உண்மை பேசும் நல்ல முதல்வர். தமிழகம் உட்பட நாடெங்கும் போலீஸ் நியாயமாக செயல்படவில்லை. பெரிய அளவில் பெட்டிகள் கை மாறுகின்றன.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
26-டிச-201212:36:40 IST Report Abuse
villupuram jeevithan அந்த காவலர் இறந்ததற்கு காரணம் போராட்டகாரர்கள் இல்லை உடலில் காயம் ஏதும் இல்லை என்று மருத்துவர் கூறியுள்ளாரே?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sathiya Arunachalam - Tirunelveli,இந்தியா
26-டிச-201212:07:14 IST Report Abuse
Sathiya Arunachalam நமக்கு தான் அடுத்தவன் மேல பழி போடுறது "கை" வந்த கலையாச்சே.......
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-டிச-201212:04:49 IST Report Abuse
Nallavan Nallavan By accusing police department Sheila Deepshit accuse herself Delhi CM should do something useful (I hope she is a living being and thus can move) instead of blaming her own governance.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
26-டிச-201211:32:15 IST Report Abuse
LAX பொறுப்பா விளக்கம் அளிக்கறத விட்டுட்டு இந்தம்மா அடுத்தவர்கள் மேல் இப்படி குற்றம் சொல்வது பொறுப்பை தட்டி கழிக்கும் செயலன்றி வேறில்லை. ஏற்கனவே மக்களின் கோபம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் வேளையில் இந்தம்மாவின் திசைதிருப்பும் குற்றச்சாட்டால் விளைவுகள் இன்னும் மோசமாகப்போகிறது என்பதே உண்மை.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Kumar - Singapore,சிங்கப்பூர்
26-டிச-201211:22:32 IST Report Abuse
Kumar நாட்டு மக்களை வைத்து காமடி கிமடி பண்ணலையே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
RAJ M - thoothukudi,இந்தியா
26-டிச-201211:19:16 IST Report Abuse
RAJ M ஒரு பொண்ணோட மானம் பறிபோயிருக்கு, இத வச்சி கூட அரசியல் பண்றாங்களே??? இவங்க குடும்பத்துலயும் பெண்கள் இருக்காங்கங்கிறத மறந்துட்டாங்களா??????? ஒருவேளை, அவங்களுக்கும் இந்த கதி (வரக்கூடாது என்று இறைவனை பிரார்த்திப்போம்) வந்தால் அதை வைத்தும் கூட அரசியல் பண்ணுவாங்களோ?????????
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.