தூத்துக்குடி : ""தமிழக வறட்சி நிவாரண பணிக்காக, மத்திய அரசு, 1,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்,'' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாநில பொதுச் செயலர் சண்முகம் வலியுறுத்தினார்.
தூத்துக்குடியில், அவர் கூறியதாவது: தமிழகத்தில், வறட்சி, வறுமை காரணமாக, இதுவரை, ஒன்பது விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். காவிரியில், உரிய நீரை பெற்றுத்தராததால், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில், 14 லட்சம் ஏக்கரில், பயரிடப்பட்டிருந்த நெற்பயிர் கருகி விட்டது. விவசாயிகளுக்கு, 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
எனவே, வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட, விவசாயிகள் குடும்பத்திற்கு, தமிழக அரசு, தலா, 10 லட்சம் ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கவேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய், அவர்களின் குடும்பத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும். இதை,பேரிடராக அறிவித்து, மத்திய அரசு, தமிழக வறட்சி நிவாரண பணிக்காக,1,000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.