திருநெல்வேலி: மழைவேண்டி உயிருடன் சவ ஊர்வலம் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூன், ஜூலையில், தென்மேற்கு பருவமழையும், தற்போது பெய்யவேண்டிய வடகிழக்கு மழையும் பொய்த்துவிட்டது. மழை வேண்டி, நாங்குநேரியை அடுத்த வடக்கு விஜயநாராயணத்தில், சவ ஊர்வலம் நடத்தினர். அதில் பொம்மைக்கு பதிலாக, அதே ஊரைச்சேர்ந்த அங்கப்பன் என்பவரை படுக்க வைத்து, அலங்காரம் செய்து இழுத்துசென்றனர். இதுகுறித்து தலையாரி ராஜகோபால், போலீசில் புகார் செய்தார். மழைக்காக இதுபோல ஒவ்வொரு கிராமத்திலும்சவ ஊர்வலம் நடத்த ஆரம்பித்தால், பொதுமக்களுக்கு தொல்லையாக இருக்கும் என புகார் தெரிவித்தார். இதனால், சவ ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்த சுப்பையா, சாமியான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சவ ஊர்வலத்தில், பிணமாக உட்கார்ந்திருந்த அங்கப்பன் தப்பிவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.