Advertisement
குளிப்பதற்கு கூட தகுதியில்லாத இந்திய புண்ணிய நதிகள் : அதிர்ச்சி தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,01:19 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 26,2012,01:24 IST

புதுடில்லி : இந்தியாவின் வடமாநிலங்களில் பாயும் கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், குளிப்பதற்கு ஏற்ற தகுதி கூட இல்லாத அளவிற்கு மாசடைந்துள்ளதாக அரசு சாரா அமைப்பு மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பத்மஸ்ரீ விருது வென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் அனில் ஜோஷி தலைமையில், டேராடூனில் இயங்கி வரும் ஹெஸ்கோ என்ற அரசுசாரா அமைப்பு, இந்தியாவின் வடக்கு மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் ஓடும் நதிகள் குறித்து ஆய்வு நடத்தும் பொருட்டு, அப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 27 நாட்கள் இவர்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது, இக்குழு, 1,800 கி.மீ அளவிலான தூரத்தை கடந்து அங்கு ஆய்வை மேற்கொண்டது.

தாங்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்து அனில் ஜோஷி கூறியதாவது, நாங்கள் உத்தரபிரேதசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 24 நதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டோம். இம்மாநிலங்களில் ஒடும் நதிகள், மக்கள் குளிப்பதற்கு உண்டான தகுதி கூட இல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது. இந்நதிகளில் பெருமளவு சாக்கடை நீரே ஓடுகிறது. இதன்மூலம், அதனை சார்ந்து வரும் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் யமுனை, வருணா, கண்டாக் உள்ளிட்ட நதிகள் அதிக மாசடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நதிகள் ஓடும் பகுதிகளில், தொடர்ந்து மாசு அதிகரித்து வருவதன் மூலம், நீர் மற்றும் நில சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் அசாதாரண மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.

தீர்வு : பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வழிகோலுகிறதோ, அதேபோல,இயற்கை நீர் வளங்களான இத்தகைய நதிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை காக்கும் பொருட்டு, ஜி.இ.பி எனப்படும் மொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற திட்டத்தை அரசு வகுத்து, நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அக்குழு தெரிவித்துள்ளது.

தாங்கள் மேற்கொண்ட ஆய்வின் சாராம்சங்களை ஒரு அறிக்கையாக தயாரித்து பிரதமர் அலுவலகம் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் விரைவில் அனுப்ப உள்ளதாக ஜோஷி கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (16)
Babu. M - tirupur,இந்தியா
26-டிச-201211:03:40 IST Report Abuse
Babu. M எரியும் பிணத்தை ஆற்றில் கொண்டு pooi போடும் நிலை இங்கு தான் உள்ளது. இதை எந்த அரசும் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை ,,,அப்புறம் நதி கெடாமல் என்ன செய்யும்
Rate this:
3 members
0 members
24 members
Share this comment
Nandu - Chennai,இந்தியா
26-டிச-201210:52:05 IST Report Abuse
Nandu இந்தியா புனித பூமிதான் ஒரு காலத்தில்.. இன்று?? இங்கு 'பூமி' எனும் வார்த்தை மண்ணை மட்டுமா குறிக்கிறது?... வாழும் மக்களையுமல்லவா குறிக்கிறது... சில ஆறுகளில் நீரே இல்லை... பல ஆறுகளில் நீரிருந்தும், அது நீராக இல்லை... மக்கள் மனம் மாசு பட, மாசு பட... அவர்கள் தொட்டதெல்லாம்... அவர்களைத்தொட்டதேல்லாம் மாசுபடத்தானே செய்யும்
Rate this:
1 members
0 members
18 members
Share this comment
Nagaraj Thalavai - mumbai,இந்தியா
26-டிச-201210:45:18 IST Report Abuse
Nagaraj Thalavai இந்தஆய்வினை அரசு ஏற்று நடத்தி இருந்தால் உண்மைக்கு புறம்பான கருத்துகளே வந்திருக்கும், நம் மக்கள் காலம் முழுவதும் சாக்கடையிலேயே குளிக்கட்டும் என்று உண்மை மூடி மறைக்கபடும், கங்கை,யமுனை,வருணா,கோதாவரி,கண்டாக்,போன்ற இன்னும் பல நதிகளின் பெயர்களை சொல்லிக்கொண்டே போகலாம், தமிழ்நாட்டின் நதிகளின் பெயர்களை தவிர. தண்ணீர்தான் வர மறுக்கிறதே, ஆற்றில் ஓடும் நீரை கூட நமது மக்கள்,வெளிநாட்டினர், புண்ணியமாக வணங்குகின்றனர். ஆனால் நதிகளின் நிலைமையோ இவ்வாறு இருக்கிறது. இவைகள் அனைத்து சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது, மிகபெரிய புன்னியஸ்தலங்களின் நதிகளின் நிலைமை வருத்ததிற்குரியதாக உள்ளது, ஹிந்து கோயில்களின் உண்டியல் காசு எங்கு கொண்டு கொட்டபடுகிறது என்று தெரியவில்லை. அரசு சொந்தபணத்தை செலவு செய்ய தேவையில்லை, கோவில்களில் வரும் 25% உண்டியல் பணதையாவது செலவு செய்து புண்ணியமாவது தேடிகொள்ளலாம்.
Rate this:
1 members
1 members
20 members
Share this comment
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
26-டிச-201210:32:24 IST Report Abuse
ஆனந்த் பல கோடி மக்கள் பாவத்தை தீர்ப்பதாலா அல்லது பாவம் செய்த மக்கள் இயற்கையை பற்றி கவலை படாமல் இருப்பதாலா?
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Sembiyan Thamizhvel - THIRUVALLUR,இந்தியா
26-டிச-201210:09:43 IST Report Abuse
Sembiyan Thamizhvel முதலில் கங்கையில் பாதி எரிந்த பிணங்களை மிதக்க செய்வதையும், தொற்று நோய் பாதித்து மரணமடைந்த சவங்களை எரிப்பதையும் நிறுத்துவதற்கு சட்டம் இயற்றுங்கள். வைதீக இந்துக்கள் செய்யும் அசுத்தம் சொல்லி மாளாது. நதி நீர், குடிக்க, விவசாயம் செய்ய முன்னுரிமைப்படி உபயோகப்படுத்தப்பட வேண்டும். மத முட்டாள் தனங்களுக்கு அல்ல.....வட இந்திய நதிகளில்தான் இத்தனை அசிங்கங்களும். [நிர்வாண சாமியார்கள் செய்யும் அட்டகாசங்கள் தனிக்கதை.....கேட்க சகிக்காது...] செம்பியன் தமிழவேள். திருவள்ளூர்...
Rate this:
8 members
0 members
40 members
Share this comment
vijay jessy - bengaluru  ( Posted via: Dinamalar Android App )
26-டிச-201209:30:29 IST Report Abuse
vijay jessy இவ்வளவு பிரச்சணையில் நதி்களை தேசிய மயமாக்கும் தி்ட்டம் வேறு....
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Raj - Chennai,இந்தியா
26-டிச-201208:48:28 IST Report Abuse
Raj தேவை இல்லாத சடங்குகள், சம்பிரதாயங்கள், தொழில் துறையினரின் அலட்சியம், அதிகாரிகளின் அலட்சியம் ... நாட்டில் உள்ள அனைத்து நதிகளும் சாக்கடைகலாக மாறி வெகு நாட்களாயிற்று
Rate this:
1 members
0 members
17 members
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-டிச-201208:41:16 IST Report Abuse
Swaminathan Nath நாட்டின் நலன் கருதி நதிகளை சுத்தம் செய்யவேண்டும், கழிவு நீர் போக வேறு மாற்று பாதை அமைக்க வேண்டும்,.
Rate this:
2 members
1 members
6 members
Share this comment
Madukkur S M Sajahan - Madukkur,இந்தியா
26-டிச-201207:54:14 IST Report Abuse
Madukkur S M Sajahan நதிகளின் புனிதத்தை கெடுத்தது யார்,நாம் தானே. இறைவணக்க ஸ்தலங்களில் இருந்து வரும் வருமானத்தைக்கொண்டு நாம் நதிகளை சுத்தப்படுத்தி பராமரிக்கலாம்.
Rate this:
1 members
1 members
9 members
Share this comment
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
26-டிச-201207:42:52 IST Report Abuse
மும்பை தமிழன் மக்களின் மனம் போலதானே எல்லாம் இருக்கும்
Rate this:
0 members
1 members
13 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.