சேலம்: "ரயில் நிலையங்களில், குப்பை கொட்டுதல், சமைப்பது உள்ளிட்ட, பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்படுவோரிடம், 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும்' என, தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய ரயில்வே விதிகளின்படி, ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகள், ரயில் தடங்கள், ரயில்கள் மற்றும் ரயில்வே இடங்கள் ஆகியவற்றில், அசுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
அதன் விபரம் வருமாறு:
* அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற ரயில்வே இடங்களில் மற்றும் ரயில்களில் குப்பை போடுவது.
* அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற ரயில்வே இடங்களில் சமைப்பது, குளிப்பது, எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, அசுத்தப்படுவது.
* சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தவிர ரயில் பெட்டிகள் உள்ளிட்ட மற்ற ரயில்வே இடங்களில் போஸ்டர் ஒட்டுவது, வாசகங்கள் எழுதுவது மற்றும் படங்கள் அல்லது பிற வாசகங்கள் வரைவது.
* ரயில்வே இடங்களை மற்ற எந்த விதத்திலும் அசுத்தப்படுத்துவது.
மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடமும், மேற்கண்ட விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே அதிகாரிகள் மூலம், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். பொதுமக்கள், ரயில்வே இடங்களை சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.
ரயில் நிலையங்களில் செயல்படும் அங்கீகாரம் பெற்ற வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள், குப்பைக்கூடை வைத்து, அதன் மூலம் குப்பைகளை சேகரித்து சரியான முறையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.