விழுப்புரம்:ஒவ்வொரு மாதம் இறுதி தேதியில் சம்பளம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் கோலியனூரில் நடந்தது. ஒன்றிய தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பழனிவேல், ரெஜினா புனிதவதி மற்றும் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமூர்த்தி வரவேற்றார். மாவட்ட தலைவர் அண்ணாமலை, இணைச் செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.ஆலோசனைக் கூட்டத்தில், சத்துணவு மையங் களுக்கு வழங்க வேண்டிய மான்யங்களை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்க வேண்டும். மாத இறுதி வேலை நாளில் சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகள் உரிய காலத்தில் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எல்லாம் சரிதான் அரிசி பருப்பு முக்கியமாக முட்டை இதெல்லாம் விற்பனை செய்து வசதி் வாய்ப்புகளை பெருக்கி கொண்டு வரும் ஊழியர்களையும் கட்டுபடுத்தி்வைத்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் ஏழை மாணவர்களுக்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் பொருள்களை விற்று அதி்ல் லாபம் பார்க்கும் சமுகவிரோதி்களை மிக கேவலமானபிறவிகளை கடுமையாக தண்டிக்க சட்டதி்ருத்தம் வேண்டும் பொதுமக்களும் சத்துணவுதி்ட்டத்தை கண்காணிக்க வேண்டும் நன்றி சற்குணம் சிங்கப்பூர்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.