சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, மதுரை கலெக்டர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி, தலைமைச் செயலரிடம், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மனு அளித்தார். மதுரையில், இம்மாதம், 20ம் தேதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், நாடக காதல் திருமணங்ளால், இளம்பெண்கள் மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விவாதிக்கப்பட்டு, ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், செய்தியாளர்களிடம் பேசிய, ராமதாஸ், தீர்மானங்கள் குறித்து விளக்கினார். இதையடுத்து, சில அமைப்பினர், மதுரை கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், ராமதாஸ் வன்முறையை தூண்டும் விதத்தில்,பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து, "அடுத்த இரு மாதங்களுக்கு, மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைய, ஏன் தடை விதிக்கக் கூடாது' என்பது குறித்து, 26ம் தேதி (நேற்று) விளக்கம் அளிக்கும்படி, ராமதாசுக்கு, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், ராமதாஸ் தரப்பில், இதற்கு பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து, நேற்று, சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த, பா.ம.க., தலைவர் மணி, தலைமைச் செயலர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், மதுரை கலெக்டர் அளித்த நோட்டீசை ரத்து செய்யும்படி, கோரிக்கை விடுத்திருந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.