சென்னை:"வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட, டெல்டா மாவட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு, நிவாரணம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:காவிரி பிரச்னையில், தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. அரசியல் கட்சிகளையோ, விவசாய அமைப்புகளையோ கலந்து ஆலோசிக்காமல், பிரச்னையை அணுகுவது, உரிய தீர்வை ஏற்படுத்தாது.தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து போவதைக் கண்டு, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த, 10 விவசாயிகள், இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை, குறைத்துக் காட்டுவதில் தான், அரசு கவனமாக உள்ளது.
விவசாயிகளை சாக விடாமல் காப்பாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி காண வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது. இழப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு, தாராளமாக இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும். வேலையிழந்து தவிக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும், நிவாரணம் அளிக்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கையை மறைக்காமல், அவர்களின் குடும்பங்களுக்கு, தாமதமின்றி நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசுப் பணி அளிக்க வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அறிக்கை மலையா கொட்டுவத பார்த்தால், எதோ தேர்தல் வெகு தொலைவில் இல்லை என்பதை உறுதி செய்கிறது போல் தெரிகிறது.. இவர் வீட்டு பிரசசினைய எல்லாம் கொஞ்சம் ஓரம் கட்டி வச்சிருக்காங்க போல.. ஒரு கத உண்டு, சாபாட்டிற்காக இரு நாய்கள் சண்ட போடுகையில் ஒரு பூனை அதனை சாப்பிட்டு விட்டதாம். அது போல் உள்ளது தாத்தாவும் பாட்டியும் செய்வது. தண்ணிக்கும், மின்சாரத்திற்கும் இவர்களுக்குள் சண்டை போட்டுகொண்டு, மத்திய அரசை மக்களிடம் இருந்து காபாற்றி வருகிரார்கள்.. உங்கள் கூற்றுப்படி, பாட்டிதான் அனைத்து கட்சியையும் கூட்ட மாட்டேங்குரங்கன்ன, நீங்க பண்ணலாமே?
எதிர்கட்சிகள் இடித்துரைக்கத்தான் அதிலும், கலைஞர் இருப்பதால் தான் இந்த வேலையும் நடக்கிறது. இல்லையெனில், இவர்கள் எல்லா விசயங்களிலும் கும்பகர்ணங்கள் ??? MGR ஆட்சியில் கலைஞரால் தான் ஓரளவு வேலைகள் நடந்தன என்பதை நாடறியும். ஆனால் இன்று, எதிலும் அடக்குமுறை. நியாயம் சொல்ல முடியுமா ???? கலைஞர் ஆட்சியில் மட்டும் ஏன் க்ளைமாக்சில் தான் J வருவார். நியாயம் சொல்லும் காவல்துறை போல ????அதுவரை அவருக்கு வேலையே கிடையாததைப்போல...??? இப்போதும் யாரை சுட்டாலும், கொலை நடந்தாலும், தற்கொலை, எந்த பேச்சும் கிடையாது. ஒரு மண்ணும் கிடையாது .ஒரு வேளை அவங்க படம் போட்டுக்கிட்டு நாக்க, மூக்க வெட்டிக்கனுமோ ???? சேகரா நல்லா மனசுல வச்சிக்கோப்பா ???? அப்பிடி எதுவும் செஞ்சிக்காதப்பா ????

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.