Advertisement
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,23:44 IST
கருத்துகள் (77)
சென்னை:மானியமில்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலை, 890 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம், "கட்' ஆனதால், முந்தைய சிலிண்டர் விலையான, 398 ரூபாயை விட, கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

மேலும், மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை கணக்கிடுவதில், "ஏஜென்சி' நிறுவனங்கள், முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மானிய விலை அல்லாத சிலிண்டர்களை திரும்ப தரும் நடவடிக்கையை, நுகர்வோர் துவக்கி உள்ளனர்."குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, இனி, மானிய விலையில் வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. செப்., 14ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அறிவிப்பின்படி, மார்ச், 31ம் தேதி வரையிலான, நடப்பு நிதியாண்டில், மூன்று சிலிண்டர்களை மட்டும், மானிய விலையில் நுகர்வோர் பெற முடியும்."மானிய விலை காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, செப்., 14ம் தேதி மற்றும் அதற்கு பின், போடப்படும் ரசீதுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட வேண்டும்' என, மத்திய அரசு, தெளிவாக அறிவித்துள்ளது.

ஆனால், காஸ் சிலிண்டர் வினியோகிக்கும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின், "ஏஜென்சி' நிறுவனங்களில் பெரும்பாலானவை, செப்., 14ம் தேதிக்கு முன் போடப்பட்ட, "பில்' களுக்கான சிலிண்டர்களையும் கணக்கிடு கின்றன.இத்தகைய முறைகேட்டால், நடப்பு நிதியாண்டில், தங்களுக்கு மானிய விலையில், இரு சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என, நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் கூறியதாவது:இரு தினங்களுக்கு முன், இம்மாதத்திற்கான சிலிண்டர் வந்தது. "நடப்பு நிதியாண்டிற்கான, மூன்று மானிய விலை சிலிண்டர்களை ஏற்கனவே நீங்கள் வாங்கி விட்டீர்கள்; எனவே, மானிய விலை அல்லாத இந்த சிலிண்டருக்கு, 890 ரூபாய், தர வேண்டும்' என, கேட்டனர்.விசாரித்தபோது தான்,செப்டம்பர்., 12ம் தேதி, "பில்' போடப்பட்டு, 15ம் தேதி வினியோகம் செய்யப்பட்ட சிலிண்டரையும், மானிய விலை சிலிண்டர் கணக்கில் சேர்த்துள்ளது தெரிந்தது.அரசு அறிவித்தப்படி, டிச., மாதத்திற்கான சிலிண்டரும், எனக்கு மானிய விலையில் வர வேண்டும். அதை தர மறுத்ததால், சிலிண்டரை வாங்காமல் திரும்ப தந்து விட்டேன். இதுபோன்ற முறைகேடு பல இடங்களில் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மானிய விலை சிலிண்டர்கள் குறித்த, அரசின் அறிவிப்பை பின்பற்றாத ஏஜென்சிகள் குறித்து, நுகர்வோர் புகார் செய்தால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐ.ஓ.சி.,
Advertisement
நிர்வாகம்தெரிவித்துள் ளது.சிலிண்டரை திரும்பத்தரும் இல்லத்தரசிகள் :சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், வீடுகளில் மின்சார அடுப்புகளின் பயன்பாடு, கடந்த இரண்டாண்டுகளில், அதிகரித்துள்ளது. தற்போது, தமிழகத்தில் நீடிக்கும் பல மணி நேர மின்வெட்டால், மின்சார அடுப்பையும், பயன்படுத்த முடியாத நிலைக்கு, இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மேலும், பெரும்பாலான வீடுகளில், மாதத்திற்கு ஒரு காஸ் சிலிண்டர் பயன்படுத்துவதால், நடப்பு நிதியாண்டிற்கான, மானிய விலை சிலிண்டர்களைபெரும்பாலோர், நவ., மாதத்திற்குள் பெற்று விட்டனர்.

அரசின் மானியத்துடன், 398 ரூபாய் கொடுத்து, சிலிண்டர் வாங்கி வந்த, இல்லத்தரசிகள், தற்போது மானியமில்லாமல், 890 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டியிருப்பதால், கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை, குரோம்பேட்டையில், "இண்டேன்' நிறுவனத்தின், குறிப்பிட்ட, "ஏஜென்சி'யின் வாடிக்கையாளர்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று, மானிய விலை அல்லாத சிலிண்டரை வாங்க மறுத்துள்ளனர். இதே போல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், சிலிண்டர் வாங்காமல் மக்கள் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். "மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதாக உயர்த்த வேண்டும். இல்லையெனில், இதன் விளைவை, வரும், லோக்சபா தேர்தலில் அரசு சந்திக்கும்' என்கின்றனர் நுகர்வோர் அமைப்பினர்.



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (77)
R.Saminathan - mumbai,இந்தியா
28-டிச-201210:58:45 IST Report Abuse
R.Saminathan மத்தியரசுவின் இந்த சமையல் காஸ் சிலிண்டர் விலை 890 மக்களுக்கு மக்களுக்கு கடுமையானதாகும்..
Rate this:
0 members
1 members
3 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
27-டிச-201216:41:52 IST Report Abuse
KaNaGaRaJ. S... சராசரியான குடும்பத்திற்கு கண்டிப்பாக 12 உருளைகள் தேவை இது ஏன் சூடு சொரணை இல்லாத மத்திய அரசுக்கு தெரிய மாட்டேன்கிறது உளுந்து அரைத்த அம்மி போல வழுவழு கொளகொள ru இருக்கிறார்களே
Rate this:
0 members
2 members
14 members
Share this comment
Raju INDIAN Coimbatore - Coimbatore,இந்தியா
27-டிச-201213:21:56 IST Report Abuse
Raju INDIAN Coimbatore சிலிண்டர் மானிய அளவு பிரச்சனையால் வேறு ஒரு முக்கிய பிரச்னை எழ வாய்ப்பு உள்ளது. அது தான் மக்களின் எரிபொருளாக மாறும் விறகுகள். காடுகளின் அழிவு படு வேகத்தில் உள்ளது, அரசு இதனை கருத்தில் கொண்டு மாற்று எரிசக்தி வழிகளை மக்களுக்கு தரவேண்டும். 9 சிலிண்டருக்கு மேல் மானியம் இல்லாமல் தர ஓகே ஆனால் மக்கள் அவதி படுவதை யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாது. AJENCY முறையாக சிலிண்டரை சப்பளை செய்ய முறையான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். Fraud பன்னா அடிச்சு தொரதுங்க. FEAR ONLY FOR GOD . தப்பு பன்ன அவங்க தயங்காத பொது, தண்டனை கொடுக்க நாம தயங்க கூடாது.
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
mirudan - kailaayam,இந்தியா
27-டிச-201211:12:05 IST Report Abuse
mirudan காங்கிரஸ் கட்சி காஸ் விநியோகத்தில் கறாராக இருக்க வேண்டும் அப்பொழுதான் காங்கிரஸ் கட்சி காணாமல் போக வாயுப்புகள் அதிகரிக்கும்
Rate this:
2 members
0 members
30 members
Share this comment
meekannan - Chennai,இந்தியா
27-டிச-201210:57:58 IST Report Abuse
meekannan இந்த பிரச்னைக்கு தீர்வு நான் சொல்லுகிறேன், அதாவது ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டை கருணாநிதி ஆண்டதால் தமிழ்நாடு அழிந்து சுடுகாடானது அதை சீர் செய்யவே பால், பஸ், மின்சாரம், டாஸ்மாக் பத்திர பதிவு கட்டணங்கள் கூட்டுகிறேன் என்று இன்றாளும் முதல்வர் அறிவிப்பை வெளி இட்டபோது அதை சந்தோசத்தோடு ஏற்றுகொள்ள பழகிக்கொண்ட மக்களுக்கு இந்த அறிவிப்பு மக்கள் மனதில் கொந்தளிப்பை தான் ஏற்படுத்தும் அதை வரும் தேர்தலில் பிரதிபலிப்பர் என்பது உண்மையே. மத்திய அரசில் உள்ளவர்கள் கூமுட்டையர்கள் என்றே சொல்லலாம் விலை ஏற்றும் பொது என்ன சொல்லி இருக்க வேண்டும் கருணாநிதி மத்திய அரசில் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்ததினால் இந்திய சீரழிந்து விட்டது அதை சீர்செய்யவே எப்படி சீரழிந்த தமிழ் நாட்டில் பால், பஸ், டாஸ்மாக், மின்சாரம், பத்திர பதிவு கட்டணங்கள் தாறுமாறாக விலை ஏற்றி இன்று தமிழ்நாடு செளித்திருபது போல் இந்திய செழிக்கவே இந்த விலை ஏற்றம் என்று சொல்லி இருந்தால் இந்த மக்களும் சந்தோசமாக ஏற்றிருப்பர். பிழைக்க தெரியாதவர்கள்.
Rate this:
10 members
0 members
16 members
Share this comment
suresh - erode,இந்தியா
29-டிச-201219:14:36 IST Report Abuse
sureshநீங்கள் நக்கல் அடிப்பதிலிருந்து நீங்கள் ஒரு அரசு ஊழியர் என்று தெரிகிறது . அப்படிதானே...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
mirudan - kailaayam,இந்தியா
27-டிச-201210:21:11 IST Report Abuse
mirudan மரியம் சார் தங்கள் தானை தலைவர் வீட்டு குடும்பத்தில் எத்தனை கேஸ் இன்னைப்புகள் இருக்கு என சொன்னால் மக்களுக்கு உதவியாக இருக்கும்
Rate this:
2 members
0 members
11 members
Share this comment
Mohamed Nasrudeen - Ramanathapuram,இந்தியா
27-டிச-201210:13:43 IST Report Abuse
Mohamed Nasrudeen அடுத்ததாக அரசு 10,000 ரூபாய் நோட்டு அடிக்க தயாராகி வருகிறது ......10..50 ரூபாய்..இனி செல்லாது ..
Rate this:
1 members
1 members
19 members
Share this comment
Babu. M - tirupur,இந்தியா
27-டிச-201210:08:21 IST Report Abuse
Babu. M மத்திய அரசும் அதன் தலைவியும் மத்த எதிரி நாடுகளுடன் கூட்டு சேந்து கொண்டு வளரும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க இந்த மாதிரி மக்களுக்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்கின்றனர் இதன் மூலம் இந்திய வளர்ச்சி பாதிக்க படும் அது தான் வெளி நாடுகளின் கனவு இன்று நம்ம நாட்டை ஆளும் கட்சியின் தலைவி வெளி நாட்டு காரி என்பதை நாம் அனைவரும் மறந்து விட வேண்டாம் ,,இந்த நிலை நீடித்தால் சோமாலிய நாட்டின் கதி தான் நமக்கும் வரும் தேர்தலில் இந்த கட்சி ஒழிந்தால் மட்டும் தான் மக்களுக்கு nimathi
Rate this:
6 members
0 members
19 members
Share this comment
saravanan - madurai,இந்தியா
27-டிச-201210:01:47 IST Report Abuse
saravanan தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் ஏன் வெகு நாட்களாக அந்நிய மோகத்திற்கு மாறாமல் விறகு கட்டைகளை எரிதுகொண்டிரிந்தார்கள் என்பது குருட்டுத்தனமான கண்மூடித்தனமான விஞ்சான அரசியல்வாதிகளுக்கு இப்பொழுதாவது தெரிந்தால் சரி. இந்திய செல்வங்களை அந்நியர்களுக்கு தாரை வார்க்கும் அந்நிய ஏஜெண்டுகளின் உண்மை முகம் இப்பொழுதாவது பாமர மக்களுக்கு புரிந்தால் சரி.
Rate this:
1 members
2 members
9 members
Share this comment
Sankaran Ganapathy - Kanchipuram,இந்தியா
27-டிச-201209:51:32 IST Report Abuse
Sankaran Ganapathy 2 ஜி ஊழல், நிலக்கரி ஊழல் ஆகியவற்றில் இழப்பு ஏற்படாமல் இருந்திருந்தால் எந்த விலையையும் ஏற்ற வேண்டிய சூழ்நிலை வந்திருக்காது. மக்களுக்கு செல்போன் பேசுவதற்காகத்தான் இழப்பைச் சந்தித்தோம் என்று கூறும் புத்தி சாலிகள், சோற்றுக்கு இல்லாமல் அடிப்பதுதான் நியாயமா. அவற்றில் இழப்புக்கள் இல்லாமல் இருந்திருந்தால் விலையும் உயர்ந்திருக்காது, இத்தாலி அண்ட் கோவின் கஜானாவும் உயர்ந்திருக்காது. மக்களின் வாட்டமும் உயர்ந்திருக்காது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் காங்கிரஸ் அண்ட் கோவின் கொள்ளைதான் என்பதை எப்போது மக்கள் உணர்வார்கள். இன்னமும் கூட ஹிமாசல் போன்ற மாநிலங்களில் காங்கிரஸிற்கு ஓட்டுப் போடும் அவலநிலை எப்போதுதான் மாறுமோ
Rate this:
1 members
0 members
16 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.