கெய்ரோ: சிரியா நாட்டு ராணுவத் தளபதி ஒருவர், கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து உள்ளார்.சிரியா நாட்டு அதிபர், பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி, கிளர்ச்சியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசாத் பதவி விலக மறுத்ததால், கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்து, அவர்களுக்கு, அமெரிக்கா ஆயுதம் வழங்கி வருகிறது.இதனால், சிரியாவில் ஓயாத சண்டை நடக்கிறது. கடந்த, 20 மாதங்களில், 50 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள், சிரியாவை ஆதரிக்கின்றன. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் பிடிவாத போக்கைக் கண்டித்து, துணை அதிபர் உள்ளிட்ட பலர் பதவி விலகி விட்டனர்.இதற்கிடையே, சிரியாவின் ராணுவத் தளபதி அல்-ஷலால், பதவி விலகி, கிளர்ச்சியாளர்களுடன் கைகோர்த்துள்ளார். "சிரியா ராணுவம், மக்களை கொல்லும் கொலை வெறி கும்பலாக மாறி விட்டது' என, அவர் தெரிவித்து உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பக்கத்துல இருந்து அதிபரை போட்டு சாய்த்து இருக்கலாம். இல்லாவிட்டால் நம்பிக்கையான ராணுவ வீரரின் துணை கொண்டு கொலைவெறி பிடித்த அதிபரை கொன்று இருக்கலாம். இது பதவி வெறியினால் செய்யப்பட்ட செயலாக கருத இடம் இருக்காது..(இவர் ராணுவ ஆட்சி கோர கூடாது) இது என் கருத்து. பல மக்களை காப்பாற்ற முடியுமானால் இந்த அரசியல் கொலை தப்பே இல்லை..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.