தேனி: இரவில் ஆடுகளை திருடி வந்து, மறுநாள் காலை அறுத்து, கறிக்கடை நடத்திய இருவரை போலீசார் கைது
செய்தனர். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, வருஷநாடு, அரண்மனைப் புதூர் உட்பட பல கிராமங்களில் ஆடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக இரவில், ஆடுகள் காளாமல் போயின. இது குறித்து அப்பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் 10க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. இந்நிலையில், மயிலாடும்பாறை அண்ணா
நகரை சேர்ந்த சேதுராமன், 42, ஆட்டு கிடையில் இருந்த இரண்டு ஆடுகளை காணவில்லை என புகார் செய்தார். போலீசார் விசாரித்து, கறிக்கடை நடத்திவரும் கடமலைக்குண்டு மாரிமுத்து, 50, ஓடைப்பட்டி தென்பழனி காளியப்பன், 55, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் இரவில் ஆடுகளை திருடி, மறுநாள் அறுத்து கூறு போட்டு, கறி விற்பனை செய்ததாக, போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இது வரை 30 க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியுள்ளதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.