Advertisement
பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை ‌‌கொடுங்கள் : போலீசாருக்கு பிரதமர் அறிவுரை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012,01:49 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 27,2012,01:51 IST

புதுடில்லி: நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுத்திட போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் இளம் பெண்களுக்கு பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது குறித்து சில அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன் டில்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை கண்டித்து டில்லியில் முக்கிய பகுதிகளில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு போலீசார் அறிவுரை வழங்க வேண்டும்
இந்நிலையில் ஐ.பி.எஸ். அந்தஸ்து பெற்ற அதிகாரிகள் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அவர்களிடம் உரையாற்றிய பிரதமர் ‌மன்மோகன்சிங் கூறியதாவது: போலீஸ் என்றால் பொதுமக்களிடையே தவறான கண்ணோட்டம் ஏற்படக்கூடாது. இதனை தவிர்க்க வேண்டும். போலீசாரின் பணி சட்டம் ,ஒழுங்கை பாதுகாப்பது தான். இதில் அவர்களுக்கு தலையாய பொறுப்பு உள்ளது. அதே நேரத்தில் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படக்கூடாது. மனித உரிமை பாதுகாக்க வேண்டும்.நாட்டில் உள்ள பல்வேறு சமூக குற்றங்களை தடுப்பதில் போலீசாரின் பங்கு முக்கியமானது. பாலியல் பலாத்கார சம்பவங்கள் உள்‌ளிட்ட சமூக குற்றங்கள் நடப்பது ஏன் என்பன குறித்து மனதத்துவ ரீதியில் கண்டறிய வேண்டும். இது போன்ற கொடூர செயல்கள் கொண்ட மனப்போக்கினை ஒழித்து கட்ட வேண்டியது அவசியம்.நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுத்திட போலீசார் பெண்‌களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் பொது இடத்தில் பெண்கள் நடந்து ‌கொள்ள வேண்டியது குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியும், எது நல்லது? , எது கெட்டது? என்பதனை போலீசார் எடுத்து கூற வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு போலீசார் நல்ல ஆலோசகராக , நண்பனாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் ‌மன்மோகன்சிங் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (10)
Anand - nagercoil  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-201213:03:41 IST Report Abuse
Anand சோனியா பிரியங்கா போன்றோருக்கு இசட் பிரிவு மற்றும் மாயாவதி்க்கு சி பி ஐ பாதுகாப்பு எங்களுக்கு காதி்லே பூ
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
sathya - Kuwait  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-201212:36:47 IST Report Abuse
sathya பிரதமர் இதையும் சோனியாவிடம் கேட்டுத்தான் சொல்லியிருப்பார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
27-டிச-201209:17:30 IST Report Abuse
Hari Doss இதற்காக நம் போலீசுக்கு தேர்வாகும் நபர்களை அமேரிக்கா லண்டன் போன்ற நகரங்களில் போய் பயிற்சி அளிக்கச் செய்யலாம். அங்குள்ள போலீசார் மிகவும் மனிதாபிமானமாக நடப்பதாகக் கேள்வி.
Rate this:
1 members
1 members
0 members
Share this comment
usha - kumbakonam,இந்தியா
27-டிச-201208:15:57 IST Report Abuse
usha சில இடங்களில் வேலியே புல்லை மேய்ந்து விடுவது போலதான். இந்த யோசனை. இருந்தாலும் நல்லவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
sabari - Anthiyur  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-201207:49:17 IST Report Abuse
sabari கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Prabhakaran Shenoy - cuddalore,இந்தியா
27-டிச-201207:38:11 IST Report Abuse
Prabhakaran Shenoy அவர் சொல்வது அவர் காதிலேயே ஏறாது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
alriyath - Hongkong,சீனா
27-டிச-201207:27:50 IST Report Abuse
alriyath நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எதாவது ஒருவழியில் போலீஸ் காரர்களுக்கு லஞ்சம் கொடுத்திருப்பார்கள் அவரவர் வாழ்நாளில் என்பது என்னுடைய ஆசியா நம்பிக்கை... இப்படி இருந்தால் அவர்கள் மீது எப்படி நம்பிக்கை வரும். அறிவுரைக்கு 500 கொடு என்று சொல்லும் போலீஸ் இடம் எவன் போயி குறைய சொல்வான்... பாதுகாப்பு கொடுக்குரன்களோ இல்லையோ மக்களை நல்ல அலையை விடுவாங்க ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்...
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
kamarud - ooty,இந்தியா
27-டிச-201206:33:10 IST Report Abuse
kamarud பெண்கள் பாதுகாப்புக்கு மட்டுமல்ல LADIES FIRST பெண்களுக்கே எதிலும் முன்னுரிமை கொடுத்து விட்டு போங்களேன் .........நாட்டில ஒரு பிரச்சினையும் வராது .........
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
naagai jagathratchagan - Nagapattinam ,இந்தியா
27-டிச-201204:44:53 IST Report Abuse
naagai jagathratchagan போலீசார், எதற்காக தங்கள் பணி உள்ளது என்ற உணர்வு, உண்மையில் அவர்களுக்கு உள்ளதா ...போலீஸ் என்றாலே அவர்கள் மீது ஏன் வெறுப்பு உணர்வு ..அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தானே என்ற சிந்தனை மக்கள் மனதில் ஏன் தோன்றுவதில்லை ...இதெற்கெல்லாம் அவர்களை பற்றிய தவறான சிந்தனை தோன்ற அடிப்படை காரணம் என்ன ..இதை நீக்குவது எப்படி என்பதற்கு கூடவே ஒரு பயிற்சியை காவலருக்கு கொடுக்கலாம் ...மக்களிடம் போலீஸ் பற்றிய எண்ண கணக்கெடுப்பு நடத்தலாம் ...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
வாசுதேவன் - Doha  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-201202:20:46 IST Report Abuse
வாசுதேவன் ஆகாகா நம்ம மங்குனி சொல்லற அறிவுறைகளை நல்லா காதுல ஏததி்கோங்கோ ஆபீசருங்களா
Rate this:
2 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.