திருச்செங்கோடு: பால் லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், ஒருவர் படுகாயமடைந்தார்.திருச்செங்கோட்டில் இருந்து, சேலம் நோக்கி, "எஸ்.எம்.பி.எஸ்.,' என்ற தனியார் பஸ், நேற்று அதிகாலை, 5.00 மணிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை, பாவனியை சேர்ந்த சதீஸ், 27, என்பவர் ஓட்டிச் சென்றார். திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்ற அந்த பஸ்சில், "ஹெட்லைட்' எரியவில்லை. அதிகாலை, 5.30 மணிக்கு, மல்லசமுத்திரம் அடுத்த அறுபதாம்பாறை என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த பால் லாரி மீது, பஸ் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில், பஸ்சின் பின்புறம் அமர்ந்து பயணம் செய்த வட்டூரை சேர்ந்த ராஜா, 26, என்பவர் படுகாயமடைந்தார். ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மல்லசமுத்திரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.