Advertisement
ராம்‌ஜெத்மலானியை விசாரிக்க கோர்ட் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012,03:24 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 27,2012,03:26 IST

ஐதராபாத்: ராமர் குறித்து ராம்ஜெத்மலானி கூறிய சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 8-ம் தேதியன்று டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரபல மூத்த வழக்கறிஞரும், சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள பா.ஜ.எம்.பி.யுமான ராம்ஜெத்மலானி (83) ராமன் ஒரு மோசமான கணவன் எனவும்,சீதை ஏழை மீன குடும்பத்து பெண் என்பதால் சிலர் பேச்சை கேட்டு அவரை தீக்குளிக்க சொன்னார் எனவும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நவீன்குமார் மல்காச்கிரி மெட்ரோ பொலிட்டன் கோர்ட்டில் , மத அமைப்பினை புண்படு்த்தும் வகையி்ல், பேசிய ராம்ஜெத்மலானி மீது இந்திய குற்றவியல் சட்டம் 295-ஏ பிரிவின் கீ்ழ் வழக்கு தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த நீதிபதி , ராம்ஜெத்மலானி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நரீட்மட் போலீசாருக்கு உத்தரவிட்டார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
27-டிச-201209:51:49 IST Report Abuse
P. Kannan இவர் ஒரு விசித்திரமான மனிதர், அவருடைய அறிவு, பதவிகளை உபயோகித்து கஷ்டப்படுபபவர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டு, எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கூறப்படும் ஸ்ரீ ராமரையோ, அவரது மனைவி யையோ பற்றி அவதுறாக பேசவேண்டிய அவசியம் தற்போது எப்படி வந்தது. ஒருவேளை விளம்பரத்திற்காக அப்படி பேசுகிறாரோ ?????????
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
27-டிச-201206:29:00 IST Report Abuse
Guru இவர் ஏன் திகா மாதிரி பேசினாரு
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
PrabhuRanganathan Sundaravaradan - Chennai,இந்தியா
27-டிச-201206:28:09 IST Report Abuse
PrabhuRanganathan Sundaravaradan யாருடைய நம்பிக்கையும் ஏளனம் செய்வது நாகரீகமான செயல் அல்ல. ராமர் ஒரு தேசிய வீரன். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளபட்டவர். ஆன்மீகவாதிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவராலும் கொண்டாடப்படுபவர். மகாத்மா காந்தி தான் இறக்கும் பொது ராம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ராமருடைய பெயரையே வைத்துகொண்டிருக்கும் ராம்ஜெத்மலானி இவ்வாறு கூறியிருப்பது ஏற்கமுடியாத ஒன்று.
Rate this:
4 members
0 members
10 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.