சேலம்,: ""என்னை ஊருக்குள் நுழைய தடுக்கும் உரிமை எவனுக்கும் இல்லை; அந்த தகுதியும் எவனுக்கும் இல்லை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
சேலத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியாதவது:வன்கொடுமை சட்டத்தில் உள்ள பாதகமான அம்சங்களை ஆய்வு செய்து நீக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தை போலீசார் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது அவசியம்.
காதல் திருமணத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பணம் பறிக்கும் திட்டத்துடன் அரங்கேறும் காதல் திருமண நாடகங்களை கண்டிக்கிறோம். இதனால், பாதிக்கப்படும் குடும்பத்தினரின் முறையீட்டை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
காதல் திருமணத்தால், ஜாதி ஒழியும் என, ஒரு சில ஜாதியினர், இளைஞர்களை திசை திருப்பு கின்றனர். குடிகாரன், வேலைக்கு செல்லாதவன், வசதி இல்லாதவன், ஒழுக்கமில்லா தவன், தன் சொந்த அத்தை பெண்ணை கூட்டி சென்றாலே வெட்டி விடும் சமுதாயத்தை சேர்ந்தவர் கள் நாங்கள் என்கிற போது, மற்றதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
மதுரை கலெக்டரின், "நான் ஊருக்குள் நுழைய கூடாது' என்ற விளக்க நோட்டீசுக்கு வக்கீல் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. என்னை ஊருக்குள் நுழைய கூடாது என்று தடுக்கும் உரிமை எவனுக்கும் இல்லை; அந்த தகுதியும் எவனுக்கும் இல்லை.வரும் ஜன., 24ம் தேதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தியும், பெண், மனித உரிமைக்கு எதிரான குற்ற நடவடிக்கையை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்று ஐ.எ.எஸ்.அதிகாரியை ஒருமையில் பேசுவார். நாளைக்கு சி.எம் ஐ ஏன் ஒருமையில் பேசமாட்டார்? அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை இவர் சாதி என்ற பெயரில் பிரிவினை மற்றும் மோதல்களை வுருவக்குகிறார். தாமதிக்காமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள் இவரை. தயவு செய்து அணைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் ஐ.எ.எஸ் அதிகாரிகள் ஒன்றுபடவேண்டும். இவர் 200 ஆண்டுகாலம் பின்னோக்கி செல்கிறார். இது போன்ற டுபாக்கூர் அரசியல்வாதிகளுக்கு ஒரு பயிற்சி நடத்தலாம்.
//குடிகாரன், வேலைக்கு செல்லாதவன், வசதி இல்லாதவன், ஒழுக்கமில்லா தவன், தன் சொந்த அத்தை பெண்ணை கூட்டி சென்றாலே வெட்டி விடும் சமுதாயத்தை சேர்ந்தவர் கள் // அப்படி என்றால் இந்த எல்லா தகுதிகள் இருந்தால் நீங்கள் கலப்பு திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்க உங்களால் அறிவிப்பு விட முடியுமா? ஜாதி ஜாதி என அப்பாவி தமிழ் நாட்டு மக்களியே ஈம்ற்றி உன் சொந்த லாபதிற்குகாக செயல்படும் உன்னை இவள்ளு நாள் தமிழ் நாட்டில் வளர விட்டது இந்த ஜாதி என்ற ஒரு வார்த்தை மக்கள் நிம்மதியாக இருந்தால் உன்னை போன்ற ஜாதி வெறிய்பிடுத்த அரசியல்வாதிகள் இது போன்ற பிரச்சனிகளை கையிலே எடுத்து கொண்டு இந்த அப்பாவி மக்களை ஈமற்றி அரசியல் லாபம் தேடும் உன்னை தூக்கிலே போட்டால்குட பாவம் உன்னை சும்மா விடாது ...
இந்திய சமூகம் குடும்பங்கள் சார்ந்தது. ஆனால் சமூக நிகழ்வான திருமணம் மட்டும் தனி மனித முடிவுக்கு உட்படுத்தபடுவதே ஒரு சட்ட-சமூக முரண்.
வெளிநாடுகளில் தனிமனிதன் சார்ந்த சமூக வழக்கம் உண்டு. அதை அடிப்படையாக கொண்ட அந்நாட்டு சட்டங்களை பின்பற்றி அப்படியே பாரத மக்கள் மேல் திணிப்பதும் ஒரு சமூக அடக்குமுறையே
திருமண முடிவுகளில் பெற்றோருக்கு உரிமை.. அப்படி மீறி கள்ள திருமணத்துக்கு போகும் பட்சத்தில் சொத்துரிமை இழப்பு போன்ற சட்டங்கள் வர வேண்டும்..
சாதி மோதலை தூண்டி விடுவதை தான் ஏற்க முடியவில்லை. காதல் திருமணங்களால் எத்தனை பெற்றோர்கள் மன உளச்சலுக்கு அளாகிருபர்கள். சில கட்சிகள் இதை அரசியல் ஆக்குகிறார்கள் .இட ஒதுகிடு இல்லா கல்வியும் , வேலைவஈய்ப்பும் என்று வருகிறதோ அப்பொழுது வரை இந்த சாதி மோதலை தவிர்க்க முடியாது . அல்லது ஒவொவொரு சாதி மக்கள்தொகையின் அடிபடையில் கல்வியும் , வேலைவஈய்ப்பும் இடஒதுகிடு அமைத்தால் சாதி மோதலை தவிர்க்க முடியம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.