சிவகங்கை: சிவகங்கையில்,வீட்டு மாடியில் பூசணி கொடி வளர்த்து,12 கிலோ எடையுள்ள "சர்க்கரை பூசணி' அறுவடை செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை அருகேயுள்ள பழமலை நகரை சேர்ந்தவர் கே.டி.முத்தையா. இவரது வீட்டு தோட்டத்தில் காய்கறி, பூச்செடிகள், மூலிகை செடிகளை வளர்த்து வருகிறார்.தோட்டத்தில் நடவு செய்த "சர்க்கரை பூசணி' செடியின் கொடி, 21 அடி உயரமுள்ள மாடி வரை சென்றுள்ளது. மொட்டை மாடியில்,தென்னங்கீற்றுகளை போட்டு,கொடியை படர விட்டுள்ளனர். இக்கொடியில் இருந்து,10 முதல் 15 கிலோ எடை வரை "சர்க்கரை பூசணி' காய்கள் காய்த்துள்ளது.
இது குறித்து கே.டி.,முத்தையா கூறுகையில்,""தரையில், 2 க்கு 2 அடி அகல, ஆழத்தில் குழி அமைத்து, ஒட்டுரக விதையை புரட்டாசியில், நடவு செய்தேன். வீட்டு மாடியில்கொடியை ஏற்ற வேண்டும் என்பதற்காக, நன்கு கொடி வளர, நெல் கருக்காய் (நெற்பதறு), எருதை போட்டு வளர்த்தேன். கொடியும், வீட்டு மாடி வரை நன்கு வளர்ந்தது. தை பொங்கல் பூஜையில் சுவாமிக்கு படையல் செய்ய, தற்போது,10 முதல் 15 கிலோ எடை வரையுள்ள "சர்க்கரை பூசணி' வளர்ந்துள்ளது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.