ஐதராபாத்:"தகவல் தொழில்நுட்ப நகரம்' என்றழைக்கப்படும் ஐதராபாத்தில், தண்ணீர், மின்சாரம், சாலைகள் இல்லாததால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தடுமாறுகின்றன.பெங்களூருக்கு அடுத்தபடியாக, ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டுள்ளது, ஆந்திர மாநில தலைநகரம், ஐதராபாத். பார்க்கும் இடமெல்லாம், ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொண்ட ஐதராபாத் மற்றும் புறநகர் பகுதிகளில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், நிறுவனங்கள் தள்ளாடுகின்றன.
மின்சார இணைப்பு கிடைக்காமலும், போதிய தண்ணீர் இல்லாமலும், தள்ளாடும் நிறுவனங்கள், மாநில அரசை அணுகியும் பலனில்லை. மிக பெரிய, விப்ரோ, டி.சி.எஸ்., இன்போசிஸ் போன்ற நிறுவனங்களின் கிளைகள், புறநகர் பகுதிகளில் ஏராளமாக உள்ளன.அவற்றிற்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. பல நிறுவனங்களுக்கு, அணுகும் சாலைகளே இல்லை. தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து, அந்த பகுதிகளை பார்வையிட்ட, மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், பொன்னல லட்சுமணய்யா, விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என, கூறி சென்றார்.இன்னும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை என, புலம்புகின்றன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.