ரயில்வேயில் இரண்டரை லட்சம் காலியிடங்களை நிரப்புவதில் நிலவும் தாமதத்தை கண்டித்து, வேலை நிறுத்தம் செய்வதற்கு, ரகசிய ஓட்டெடுப்பு நடத்த, அகில இந்திய ரயில்வே சம்மேளனம் முடிவு செய்துள்ளது. இச்சம்மேளன தேசிய துணை தலைவர் ராஜா ஸ்ரீதர் கூறியதாவது: ரயில் பயணிகளின் பாதுகாப்பில் நேரடி தொடர்புடைய இன்ஜின் டிரைவர், கார்டுகள் பணியிடங்கள் ஒன்றரை லட்சம் காலியாக உள்ளன. பணியிலுள்ள டிரைவர், கார்டுகள் கூடுதல் நேரம் பணிபுரிய நிர்பந்திக்கப்படுகின்றனர். தெற்கு ரயில்வேயில் மட்டும், 8,000 பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இவற்றை நிரப்புவதில் தாமதம் நிலவுகிறது. பதவி சீரமைப்பு, புதிய ஓய்வூதிய திட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து, மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது. வரும் ஏப்ரலுக்குள், இக்கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில், நாடு தழுவிய அளவில், ரயில் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட, ஊழியர்களிடம் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த, விசாகப்பட்டினத்தில் நடந்த, சம்மேளன மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. எனவே, மத்திய அரசு, ரயில்வே வாரியம் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதம் செய்யக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.