காந்திகிராமம்: ""வசிப்பதற்கு ஒரு வீடும்,விவசாயம் செய்ய சிறிதளவு நிலமும் இல்லாத வாழ்க்கை வீணானது,'' என சென்னை நில மீட்பு இயக்க தலைவர் கிருஷ்ணம்மாள் பேசினார். திண்டுக்கல் காந்திகிராம அறக்கட்டளை சார்பில் நடந்த விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ணம்மாள் பேசியதாவது: 1968 ல் கீழ்வெண்மணியில் மிகப்பெரிய புரட்சி செய்து, அதிக நிலம் வைத்திருந்தவர்களிடம் இருந்து, நிலமற்றோருக்கு ஒரு ஏக்கர் நிலம் வாங்கி தரப்பட்டது. இவர்கள் தங்களுடைய உழைப்பால் தற்போது மூன்று ஏக்கர் நிலம் வைத்துள்ளனர். பெண்கள் விழிப்புடன் செயல்பட்டால் தான், எந்தவொரு சமுதாய மாற்றமும் சாத்தியமாகும். விவசாயிகளுக்கு வசிக்க ஒரு வீடும், விவசாயம் செய்ய சிறிதளவு நிலமும் அவசியம் வேண்டும். இவை இரண்டும் இல்லாத வாழ்க்கை வீணானது.
உலகமயமாக்கல், தாராளமய மாக்கல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு போன்ற தவறான கொள்கைகளால்,பாமர மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த பெண்கள் பொதுநல நோக்கில் செயல்பட வேண்டும், என்றார். காந்திகிராம அறக்கட்டளை செயலாளர் சிவக்குமார், ஜன சத்யா கிரக அமைப்பின் தலைவர் பி.வி.ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.