திருநெல்வேலி: நெல்லை பார்லி., தொகுதிக்கான தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. ஸ்டாலின் பேசியதாவது: டில்லியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற ஜெ., வெளிநடப்பு செய்துள்ளார். நான் துணை முதல்வராக இருந்தபோது அத்தகைய கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். வழக்கமாக, ஆங்கில எழுத்து வரிசைப்படி தான் மாநில முதல்வர்களை பேச அழைப்பார்கள். தமிழகத்திற்கு கடைசியில் தான் வாய்ப்பு கிடைக்கும். நமது கோரிக்கைகளை, 200 பக்க "பைல்' ஆக முன்பே கொடுத்து விடுவதால், 10 நிமிடங்கள் தான் பேச வாய்ப்பு கிடைக்கும். நிறுத்தக் கோரி "பெல்' அடித்தாலும் கூட பேசியிருக்கலாம். ஆனால், அதை விட்டு விட்டு, புறக்கணிப்பு என்பது மக்களை குழப்பும் கபட நாடகமாகும். அனேகமாக பார்லி.,தேர்தலுடன், தமிழக சட்டசபை தேர்தலும் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இருநூறு பக்க பைல் என்ன இரண்டாயிரம் பக்கமே எழுதி முன்பே அனுப்பினாலும் ஒரு நடவடிக்கையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள உங்க திருக்குகளை தீய கூட்டம்தானிருக்கிறதே . துவக்கத்திலேயே ஜெயலலிதா எழுந்து வந்திருக்க வேண்டும். முக்கால் வாசி முதல்வர்கள் கொட்டாவி விட்டுக் கொண்டு இருக்கும் இடத்தில் இவர் பேசி என்னாகப் போகிறது?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.