Advertisement
குஜராத்தை பின்னுக்கு தள்ளிமுன்னேறியது பீகார் மாநிலம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012,05:55 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 28,2012,10:11 IST

புதுடில்லி:பொருளாதார வளர்ச்சியில், குஜராத்தை பின்னுக்கு தள்ளி, முன்னேற்றம் அடைந்துள்ளது பீகார் மாநிலம்."பாரதிய ஜனதாவை சேர்ந்த, முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மாநிலம், அனைத்து மட்டத்திலும் வளர்ச்சி அடைந்துள்ளது' என்ற, பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், மிகவும் பின்தங்கிய, சட்டம் - ஒழுங்கு அறவே இல்லாத, பீகார் மாநிலம் தான், 2010ம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக விளங்குகிறது என்பதை, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
Guru - Batam,இந்தோனேசியா
28-டிச-201213:43:28 IST Report Abuse
Guru பலே பலே.., அருமையான கனவு.... நன்றாக ஆழ்த்த தூகத்தில் உளறுகிறார் என்று நினைகிறேன்... பாவம் தூங்கட்டும்..
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Ashok - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-டிச-201211:53:05 IST Report Abuse
Ashok பீகார் நிதிஷ் தலைமையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.. அதற்காக மோடியின் வளர்ச்சியுடன் ஒப்பிட வேண்டாம். திருவாளர் லல்லு திரு முயற்சியால் பீகார் அதல பாதாளத்தில் இருந்தது.. அதனால் சதவிகிதபடி பார்த்தால் அதிகம் சாத்தியம்.. ஆனால் திரு மோடி அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நல்ல வளர்ச்சி கண்டு வருகிறார். 1 ரூபாயில் இருந்து 2 ருபாயாக வருமானம் உயர்ந்தால் அது 100% வளர்ச்சி..அதி நேரம் 10 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக உயர்ந்தால் அது 50% வளர்ச்சி.. இந்த % மட்டும் பார்த்து மோடி அவர்களின் முயற்சிகளை மட்டப்படுத்துவதாக உள்ளது உங்கள் தலைப்பு.. மற்ற எல்லா மாநிலங்களும் 2 ரூபாய் 3 ரூபாய் என இருக்கும் நிலையில் மோடி அவர்கள் எப்படி அந்த 10 ரூபாய் இலக்கை எட்டினார் என்பது முக்கியம். அந்த இலக்கை அடைந்த பிறக்கும் வளர்ச்சி விகிதத்தை எப்படி maintain செய்கிறார் என்பது அதைவிட முக்கியம். அப்படியும் பீகாரின் வளர்ச்சி 9% ஆனால் வளர்ச்சி அடைந்த குஜாராத்தின் வளர்ச்சி விகிதம் 8% - இதிலும் பெரிய வித்தியாசம் இல்லை.. இது புரியாமல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது தினமலரின் தலைப்பு.. நிதிஷ் நல்ல முதல்வர் கடுமையாக உழைத்து பீகாரை முன்னேற்றுகிறார்.. யாரும் மறுப்பதற்கில்லை.. ஆனால் திரு மோடி அவர்கள் குஜராத்தில் செய்துள்ள மாற்றங்கள் மொத்த இந்தியாவுக்கும் தேவை.. மோடி பிரதமர் ஆனால் அது பீகாருக்கும் சேத்து நல்லது என்பது நிதிஷ்குமாருக்கும் நன்றாக தெரியும் - இருந்தாலும் அவரது சொந்த ஒட்டு அரசியலுக்காக மோடியை விமர்சனம் செய்கிறார்.. நல்ல தலைவர் பீகாரை வழி நடத்துட்டும்..மோடி இந்தியாவை வழி நடத்தட்டும்.. JAIHIND
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
28-டிச-201211:48:29 IST Report Abuse
ஆரூர் ரங ஒல்லியா ஒடிசலா இருக்கறவன்தான் வேகமா ஓடமுடியும். ஏற்கனவே நல்ல வளர்ந்து குண்டாயிடவன் எப்படி அதே வேகத்தோட ஓடமுடியும். ? பசிச்சவன்தான் அதிகம் சாப்பிடுவான். புளியேப்பக்காரன் அவ்வளவு சாப்பிடமுடியுமா? இருபது வயசுக்காரன் வளருவது குறைவாகத்தான். ஆனல் இரண்டு வயது குழந்தை ? எனவே இது தவறான ஒப்பீடு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
28-டிச-201209:46:33 IST Report Abuse
Sundeli Siththar சதவிகிதப்படி சரியாக இருக்கலாம். மிகவும் பின் தங்கிய மாநிலம் 11 சதவிகித வளர்ச்சி பெறுவது சாத்தியம் [சரியான தலைமை இருந்தால்]. இதற்காக நிதிஷ் குமார் அவர்களை பாராட்டலாம்... ஆனால் நன்கு வளர்ச்சியடைந்த குஜராத் போன்ற மாநிலம் 11 சதவிகித வளர்ச்சி என்பது அதை விட ஆச்சர்யமே...
Rate this:
3 members
1 members
8 members
Share this comment
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
28-டிச-201215:33:15 IST Report Abuse
கோமனத்தாண்டிமுற்றிலும் இது தான் உண்மை , ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
28-டிச-201206:38:03 IST Report Abuse
ஆரூர் ரங அப்போ நம்ம ஊர் உட்பட இந்தியா முழுவதும் ஓட்டல் கிளீனர், கட்டிட சித்தாள், எஸ்டேட் தொழிலாளி வேலை செய்யிற பீகாரிங்க திரும்பிப் போயிட்டாங்களா? (அவங்க மாநிலத்தில்தான் தேனாறும் பாலாரும் ஓடுதே) அந்த வேலைகளுக்கு எந்த குஜராத்தியும் வரமாட்டாங்கரான்களே. ஏன்? புள்ளி விவரம் ஒரு ஏட்டு சுரைக்காய்தான் . ஒரு வளர்ச்சியும் இல்லாத மாநிலம் லல்லு போன்ற துரோகக் கூட்டம் இல்லாமலிருந்தால் தானாகவே கொஞ்சம் அதிகம் வளருவது இயற்கை. ஆனால் இரு வரை ஒரு நாளைக்கு பதினைந்து , இருபது மணிநேரம் கரெண்ட் இல்லாமல் , ரன்வீர் சேனா போன்ற அடியாள் படைகள் சர்வசாதாரணமாக நடமாடும் , இன்றுவரை வருடத்துக்கு பத்தாயிரம் கள்ள சாராயச் சாவுகள் உள்ள பீகார் வளர்ந்துவிட்டதுன்னு சொன்னா....சிரிக்கக் கூட தோணலை. அது இருக்கட்டும் இரு மாநிலங்களிலும் கடந்த ஐந்தாண்டுகளில் புதிய தனியார் முதலீடு எத்தனை எத்தனை எத்தனை ? அதுவே முழுக் கதையையும் சொல்லிவிடும்
Rate this:
2 members
1 members
11 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.