லக்னோ: ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிகளிடம் சிலுமிஷம் செய்த போதை ரயில் டிக்கெட் பரிசோதகர் நேற்று அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டார். டில்லி கோரக்பூரைச்சேர்ந்த சில கல்லூரி மாணவிகள், விடுமுறைக்காக உ.பி. செல்லும் பூரிபியா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி. கோச்சில் பயணித்தனர்.
இவர்கள் சென்ற ரயில் , உ.பி.மாநிலம் முர்தாபாத் ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. சார்பாக் வந்த போது குடி போதையில் இருந்த டிக்கெட் பரிசோதகர் , (டி.டி.ஆர் ) அந்த மாணவிகளின் கையை பிடித்து இழுத்தும் அவர்கள் மீது கையை வைத்து சிலுமிஷத்தில் ஈடுபட்டார். இதனால் மிரண்டு போன கல்லூரி மாணவிகள் கூச்சல் போட்டனர். இது குறித்து லக்னோ பாதுகாப்புப்படை ரயில்போலீ்ஸ் நிலையத்தில் புகார் கூறினார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த டி.டி.ஆர். பெயர் எஸ்.கே.நிகாம் என தெரியவந்தது. உடனடியாக ரயில்வே டிவிசனல் வர்த்தகப்பிரிவு மேலாளருக்கு தகவல் தெரிவி்க்கப்பட்டது. உடனடியாக அவர் மீது கற்பழிக்க முயற்சி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.