புதுடில்லி: பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் மாணவிகள் குறித்து ஜனாதிபதி மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அபிஜித் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இது குறித்து காங்., தலைவர்களிடம் கருத்து கேட்ட போது, அபிஜித் மன்னிப்பு கேட்டுள்ளதால்,அதனை ஏற்றுக்கொண்டு மன்னிப்போம், மறப்போம் என்ற முறையில் செயல்படுவோம் என கூறினார். வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், நாம் ஒருவரின் நல்ல செயலைப்பற்றி பேச வேண்டும். ஒருவர் தனது தவறை ஏற்றுக்கொண்டால், அதற்கு நாம் ஆதரவு தெரிவித்து, அவருக்கு நாம் வழிகாட்ட வேண்டும் வேண்டும் என கூறினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறுகையில், அபிஜித் தனது தவறை உணர்ந்து கொண்டு, மன்னிப்பு கேட்டுள்ளார் என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.