ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடந்த இரண்டாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில்இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. காம்பீர் 21 ரன்னிலும், ரஹானே 28, கோஹ்லி 27 ரன்னிலும் அவுட்டானார்கள்.யுவராஜ் அதிரடியாக விளையாடி 72 ரன் எடுத்தார்.பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் விளாசல்:காம்பீர்,21ரன், ரஹானே 28 ரன்,கோஹ்லி 27 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேற யுவராஜ் பாகிஸ்தான் பந்துவீச்சை விளாசி தள்ளி 72 ரன் சேர்த்தார்.
உமர்குல் 4விக்கெட்:பாகிஸ்தான் தரப்பில், உமர்குல் 4விக்கெட்டுகளை வீழ்த்தினார்.காம்பீர், ரஹானே,யுவராஜ் மற்றும் தோனி ஆகியோரை உமர் குல் அவுட் ஆக்கினார்.
10வது ஓவரில் முதல்விக்கெட்:பாகிஸ்தான் துவக்கவீரர்களான நசீர் ஜேம்ஷெத் மற்றும் அகமத் ஷேஷத் நிதானமாக ரன் சேர்த்தனர் இந்நிலையில் 10வது ஓவரில் இவர்களில் நசீர் ஜேம்ஷெத்தை 41ரன்னில் வெளியேற்றினார் அஸ்வின்.முடிவில் 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சரிய இந்திய அணி வெற்றி பெற்றது.
10லட்சம் பரிசு: இந்தியா வெற்றிக்கு வித்திட்ட யுவராஜ்சிங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.