பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
துடியலூர்
அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி மற்றும் "ஹேண்ட் இன் ஹேண்ட்'
நிறுவனம் சார்பில், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு
விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தலைவர்
கிருஷ்ணசாமி கொடிசைத்து, பேரணியை துவக்கி வைத்தார். கொண்டையம்பாளையம்
ஊராட்சி மன்ற உறுப்பினர் நாராயணசாமி, குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி சுப்பிரமணியம்
பாளையம் பிரிவு, வெள்ளக்
கிணறு
பிரிவு வழியாக, வி.ஜி.,மருத்துவமனை பஸ் ஸ்டாண்டில் நிறைவு அடைந்தது.
பேரணியில் பங்கேற்ற கொங்கு நாடு கலை, அறிவியல் கல்லூரி மாணவியர் சுற்றுச்
சூழல் விழிப்புணர்வு நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்த
னர்; மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.