சென்னை:"உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் இயங்குமானால், மாநில உரிமைகளை பறிக்கும் நிலை ஏற்படும்' என, பிரதமருக்கு முதல்வர் ஜெ., எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்:
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அமைக்கும் முயற்சிகளில், மத்திய அர” மீண்டும் ஈடுபட்டு உள்ளது.இந்த ஆண்டு, மே மாதத்தில், உங்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில், நான் உட்பட பல மாநில முதல்வர்கள், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தோம்.
தீவிரவாத தடுப்பு நடவடிக்கையை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பரிந்துரைக்கு, எல்லா மாநில முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில், மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து பணி செய்வதே சரியானதாகும்.இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் இயங்குமானால், மாநில உரிமைகளை பறிக்கும் நிலை ஏற்படும். இதனால்தான், காங்., ஆளும் மாநில முதல்வர்களே, இதை ஏற்க மறுத்துள்ளனர்.
மாநிலங்களில் உள்ள, தீவிரவாத தடுப்பு தகவல் பரிமாற்ற மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. உள்துறை அமைச்சகத்தால் அளிக்கப்பட்ட தவறான ஆலோசனையால், தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.மாநிலத்தில் நடக்கும் விஷயங்கள், அந்த மாநில முதல்வர்களுக்கு தான் தெரியும்; ஏற்கனவே நடந்த கூட்டத்தில், மாநில முதல்வர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு, உரிய முக்கியத்துவம் அளித்து, மத்திய அரசு செயல்பட வேண்டும்.மத்திய அரசு அமைக்கும் தீவிரவாத தடுப்பு மையம், மாநில அளவில், தகவல்களை பரிமாறிக் கொண்டு செயல்பட வேண்டும். இதற்கு மாநில போலீசாரை, தீவிரவாத தடுப்பு பணியை செய்ய அனுமதிப்பது சிறந்தது.
இதற்காக, தீவிரவாத தடுப்பு அதிரடி படையை, ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கலாம். தொலைத்தொடர்பு மற்றும் ஆயுதங்களை நவீனப்படுத்த, மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். இந்த கருத்துகளை, ஏற்கனவே நடந்த கூட்டத்தில் தெரிவித்து உள்ளேன்.தேசிய அளவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் போது, அது தொடர்பான வரைவு அறிக்கையை, மாநில முதல்வர்களுக்கு தர வேண்டும். மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்த பின், இறுதி முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழக முதல்வரின் கடிதத்தின் சாராம்சம் தேவையே இல்லாதது..இப்படிக்கு "கருணா". கொத்தடிமை கருணா தேர்ந்தெடுத்ததின் பலன் இது. எதற்கு நமக்கு சிரமம்..மத்திய அரசாங்கமே பார்த்துகொல்லும்போது நமக்கு எதற்கு வீண் சிரமம்..என்பார்..ஒவ்வோர் விஷயத்திலும் மாநில உரிமைகளை பறிக்கும் செயலை இபோதைக்கு ஆதரித்தால்..போலீஸ் நிலையம் கூட மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள்..அப்புறம் கிரானெட்..செம்மண் திருட்டுக்கள் தாராளமாய் நடந்தேறும்..என்பதால் மத்திய அரசாங்கத்தின் "இப்போதைய" இந்த முயற்சிக்கு நிச்சயம் கருணா குரல் கொடுப்பார். தமிழகத்தின் உண்மையான உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில் அம்மாவை தவிர யாருக்கு உண்டு? கேட்டால் மோதல் போக்கு இல்லாமல் சாதிக்க வேண்டும் என்பார்கள்..காவிரி பிரச்சினையில் எவ்ளோ வருடங்கள்..முல்லைபெரியாறு விஷயத்தில்...இன்னமும் வரப்போகின்ற பாலாறு விஷயத்திலும் நம்மை சதி செய்து கொடுமை செய்யும் மத்திய அரசும்...அதற்கு துணைபோகும் "கருணாவையும்" நாம் அடியோடு ஒழிக்காவிட்டால்..பாலைவனமாகும் நம் வாழ்க்கை...தமிழகம்..இத்தாலிக்கு அடிமைப்பட்டு போகவிடுவதா? யோசிக்கும் தருணமிது..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.