திருவனந்தபுரம்:"கேரள மாநில அரசு ஊழியர்கள், இனி, புதன் கிழமைகளில், கதர் ஆடை அணிந்து தான், அலுவலகத்துக்கு வர வேண்டும்' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது.கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான, கூட்டணி ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின், உம்மன் சாண்டி, முதல்வராக உள்ளார்.இந்நிலையில், கேரள மாநில அரசு, நேற்று வெளியிட்ட அறிக்கை:
கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், அனைத்து துறைகளிலும், பணியாற்றும் ஊழியர்கள், புதன் கிழமைகளில், கதர் மற்றும் கைத்தறி உடைகளைத் தான், அணிந்து வர வேண்டும்.அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும். மாநிலத்தில், கதர் மற்றும் கைத்தறித் துறையை, ஊக்கப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.முதல்வர் உம்மன் சாண்டி பரிந்துரையின்படி, கூட்டுறவுத் துறை அமைச்சர், சி.என்.பாலகிருஷ்ணன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். புத்தாண்டு முதல், இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
இவ்வாறு, அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய இடதுசாரி ஆட்சி காலத்திலும், கேரளாவில், இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவு, தீவிமாக அமல்படுத்தப் படவில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.