சென்னை : வடசென்னையில்,
இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில், இருவர், சம்பவ இடத்திலேயே
இறந்தனர். படுகாயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
எர்ணாவூர்,
நெய்தல் நகர் டி.என்.எச்.பி., குடியிருப்பை சேர்ந்தவர் மனோகரன்,34. இவர்,
இருசக்கர வாகனத்தில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையில்
இருந்த பள்ளத்தில் வாகனம் இறங்கியதில், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது,
அந்த வழியாக வந்த சரக்கு லாரி, அவர் மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே,
அவர் இறந்தார். தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து
புலனாய்வுபிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு விபத்து:
காசிமேட்டை சேர்ந்த தங்கவேல் மகன் நந்தகுமார்,40. இவரது நண்பர் சங்கர்,38.
இருசக்கர வாகனத்தை நந்தகுமார் ஓட்டினர். பின்புறம், சங்கர்
அமர்ந்திருந்தார். ராயபுரம் ஜி.என்., சாலை சிங்காரவேலர் நகர் சந்திப்பில்,
சாலை நடுவில் இருந்த மாநகராட்சி குப்பை தொட்டியால், வலதுபுறமாக இருசக்கர
வாகனத்தை திருப்பினார் நந்தகுமார்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர்
லாரி மோதியதில், சம்பவ இடத்தில், நந்தகுமார் தலை நசுங்கி பரிதாபமாக
இறந்தார். சங்கருக்கு கால் முறிவு ஏற்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார்.
காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு
போலீசார், ராயபுரத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் லோகநாதன்,39, என்பவரை கைது
செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.