சென்னை : குடிக்க பணம் தராததால், ஆத்திரமடைந்த, 98 வயது முதியவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். கொடுங்கையூர்,
சூழ்புனல்கரை பகுதியை சேர்ந்தவர் வாசு. இவர், லாரி நிறுவனம் ஒன்றில் வேலை
பார்த்து வருகிறார். இவரது தந்தை வீரராகவன், 98. மதுவுக்கு அடிமையான இவர்,
தினமும் மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதற்காகவே அவரது மகன்
வாசு, தந்தைக்கு, தினமும், 100 ரூபாயை, கொடுத்து வந்தார்.
நேற்று
முன்தினம் வீரராகவனுக்கு, வாசு, பணம் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த
வீரராகவன், மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். வாசு உள்ளிட்டோர், அவரை
மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே
வீரராகவன் பலியானார்.சம்பவம் குறித்து, கொடுங்கையூர் போலீசார்விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.