கவுகாத்தி: அசாம் முதல்வர், தருண் கோகோய் வீட்டு அருகே, நேற்று குண்டு வெடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.அசாம் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, தருண் கோகோயின் வீடு, கவுகாத்தியில் உள்ளது. நேற்று, இந்த வீட்டின் அருகே, பலத்த சத்தத்துடன், குண்டு வெடித்தது. இதில், சஞ்சீப் தாஸ் என்ற சிறுவன், படுகாயமடைந்தான்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:கல் குவாரியில் பயன்படுத்தப்படும், டெட்டனேட்டர் குண்டுகளை, ஒயர்கள் பொருத்தப்பட்ட நிலையில், இந்த சிறுவன், சைக்கிகளில் கொண்டு சென்றுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்துள்ளது.சிறுவனுக்கு, மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த பகுதியில், இந்த மாணவன், குண்டுகளை எடுத்துச் சென்றது எப்படி என்பது பற்றி, விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, போலீசார் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.