பெங்களுரு: ""என் திருமண செலவை, பெண் வீட்டார் தான் செய்தனர். சில செலவுகளுக்கு ஜெயலலிதா பணம் கொடுத்தது பற்றி தெரியாது,'' என, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், சுதாகரன் பதிலளித்தார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.வழக்கை விசாரிக்கும், நீதிபதி பாலகிருஷ்ணாவின் கேள்விகளுக்கு பதிலளிக்க, நான்காவது நாளாக, சுதாகரன் நேற்று ஆஜரானார். மூன்று நாட்களில், 447 கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், நேற்று, 185 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.சுதாகரன் அளித்த பதில்:என் திருமண செலவுகளை, என் மனைவி வீட்டார் செய்தனர். திருமண செலவு, 5.91 கோடி ரூபாய் என, விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு, ஊழல் தடுப்பு போலீசாரிடம் தகவல் கொடுத்தது பற்றி எனக்கு தெரியாது.என் திருமணத்துக்கு பர்னிச்சர், பாத்திரங்கள் வாங்கியதற்கு சலபதிராவ், சச்சிதானந்தா ஆகியோருக்கும், திருமணத்துக்கு போட்டோ எடுத்ததற்கு ஆறுமுகம் என்பவருக்கும், வாடகை கார் இயக்கியதற்கும், திருமண செலவுகளுக்காக ஜெயலலிதா, "செக்' கொடுத்தாரா என்பது பற்றியும் தெரியாது.திருமணத்துக்காக, எனக்கு 22 சூட், 22 சர்ட், ஷர்வாணி வாங்க, 1.45 லட்சத்துக்கு, காசோலை கொடுக்கப்பட்டது பற்றியும் தெரியாது.சூப்பர் டூப்பர் கம்பெனிக்கு, சசிகலா, அவரது வங்கி கணக்கிலிருந்து, 48 லட்சம் ரூபாய் கொடுத்தது உண்மை. திருமணத்துக்காக, கண்டசா கார் வாடகைக்கு எடுத்ததற்கு, ஜெயலலிதா, பணம் கொடுத்தது பற்றியும், ராதா வெங்கடாச்சலாவுக்கு, சசிகலா பணம் கொடுத்தது, கங்கை அமரனுக்கு பணம் வழங்கியதும் எனக்கு தெரியாது.என் பெயரில், வங்கி கணக்கு துவங்க போயஸ் கார்டன் விலாசம் கொடுத்து, சசிகலா கையெழுத்திட்டார். போயஸ் கார்டன் வீட்டீல், நான், என் மனைவி சத்ய லட்சுமி, சசிகலா, இளவரசி, அவரது மகன் விவேக் ஆகியோர் தங்கியிருந்ததாக, ஜெயராம் என்பவர் கூறியுள்ளார்; அவர் யாரென்றே எனக்கு தெரியாது.இவ்வாறு சுதாகரன் பதில் அளித்தார்.வழக்கின் அடுத்த விசாரணையை, ஜனவரி, 2ம் தேதிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா ஒத்தி வைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அப்போது ஜே அந்தத் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியது கண்டு பலர் விமர்சனம் செய்தனர் "ஒரு முதல்வர் வீட்டுத் திருமணம் வேறு எப்படி நடக்கும்?" என்று ஆணவத்துடன் பதில் வந்தது. இப்போது சின்ன எம்.ஜி.ஆர். (மாஜி பினாமி) இப்படிச் சொல்கிறார் இந்தக் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொண்டதற்காகவே ஆயுள் முழுவதும் நடிகர் திலகம் வருந்தியது உண்மை திருமண ஊர்வலத்தில் வீரப்பனைப் பிடிக்காமல் ஓய்வு பெறமாட்டேன் என்று சூளுரைத்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) ஒரு செக்யூரிட்டி போல ஊர்வலத்தின் முன்னே சென்றது வேடிக்கை

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.