கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தவறாக பேசிய, முன்னாள் அமைச்சர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில, மனிதஉரிமைகள் கமிஷன்தெரிவித்துள்ளது.மேற்கு வங்கத்தில், முன்னாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசில் அமைச்சராகவும், இப்போதைய, எம்.எல்.ஏ.,வாகவும் இருப்பவர், அனிசுர் ரகுமான். கடந்த புதன் கிழமை, கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது, முதல்வர், மம்தாவை தரக்குறைவாக பேசினார்."கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கும் மம்தா, தனக்கான விலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்' என, அந்த எம்.எல்.ஏ., வாய் துடுக்காக பேசினார்.அவரின் பேச்சு, மாநிலம் முழுவதும் கண்டனத்தை ஏற்படுத்தியது. மாநில, மனித உரிமைகள் கமிஷன் தலைவர், நீதிபதி, அசோக்குமார் கங்குலி, இது பற்றி கூறும்போது,""இது, மனித உரிமை மீறல்; முதல்வரை பற்றி பேசியிருப்பது, மிகவும் தவறானது; அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.