மதுரை: வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமையும் என, தகவல்கள் வெளியாகும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், மதுரையில் நடந்த தே.மு.தி.க., கூட்டத்தில், மேலிட நிர்வாகி சூசகமாக குறிப்பிட்டார். கூட்டத்தில், கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் பேசியதாவது: லோக்சபா தேர்தலுக்கு, பூத் ஏஜன்ட்களை நியமிக்க வேண்டும். கூட்டணி குறித்து, விஜயகாந்த் முடிவு செய்வார். அவர், யாரை கை காட்டுகிறாரோ, அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். கட்சிக்கு, துரோகம் செய்தவர்களை பற்றி கவலை வேண்டாம். ஏற்கனவே, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, "ஜெ., - காங்.,' என, கூறுமளவு சில காங்., நிர்வாகிகள் செயல்பட்டனர். அவர்கள் காணாமல் போய்விட்டனர். தே.மு.தி.க.,விற்கு துரோகம் செய்தவர்களுக்கும் அதே கதி ஏற்படும். இவ்வாறு, அவர் பேசினார். "விஜயகாந்த் யாரை கை காட்டுகிறாரோ' என, தி.மு.க.,வைத் தான் அவர் குறிப்பிடுவதாக, கட்சியினர் குறிப்பிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர்களுக்கு வாய் என்பது சாப்பிட மட்டுமே இருக்கிறது, பேசினால் அனைத்துமே பொய்யாகத்தான் இருக்கிறது, இவர்கள் கலையில் ஒன்று பேசுவார்கள், மாலையில் ஒன்று பேசுவார்கள், உண்மை என்றால் என்ன என்றே தெரியாது? மனசாட்சி என்பதும் கிடையாது. கட்சி ஆரம்பிக்குமுன் கழக ஆட்சிகளுடன் கூட்டு வேண்டாம், இரண்டுமே மக்கள் துரோகிகள் என்றுதான் ஆரம்பித்தனர், பிறகு ஒரு கழகத்துடன் கூட்டு, தற்போது அடுத்த கழகத்துடன் அங்கு கூட்டு, நம் தலை விதி இவைகளை எல்லாம் கேட்க்க படிக்க வந்தே மாதரம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.