ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு குறைந்தளவிலேயே வெளிநாடுகளில் இருந்து பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன. நவம்பர், டிசம்பர், ஜனவரியில் தனுஷ்கோடி, கோதண்ட ராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் பகுதியை சுற்றி, மழை நீருடன் கடல் நீரும் சூழ்ந்து, குளிர்ந்த காற்றுடன், பனி பொழியும். இதை அனுபவிக்க, ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து பிளமிங்கோ உட்பட ஆயிரக்கணக்கான பறவைகள் வரும். மூன்று மாதங்கள் தங்கி, சவுக்கு மரக்காட்டில் முட்டையிட்டு, குஞ்சுகளுடன் நாடு திரும்பும். இவற்றை கடந்தாண்டில் சிலர், வேட்டையாடினர். சிலர் இறைச்சியை விற்றனர். தடுக்க வேண்டிய, வனத்துறையினர் அலட்சியமாக இருந்ததால், வேட்டைக்காரர்களின் ராஜ்யமாக இருந்தது. இதனால், இந்தாண்டு தாமதமாக, 100க்கும் குறைவான பறவைகளை வந்துள்ளன. கோதண்ட ராமர் கோயில் அருகே குவிந்துள்ளன. இவை அணிவகுத்து நிற்கும் அழகையும், பறக்கும் போது, வானில் சிவப்பு நிற போர்வை விரித்திருப்பது போன்ற அழகை, பொதுமக்கள் ரசித்து வருகின்றனர். இவற்றை வேட்டைக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.