பிரேசில்லா: கைதிகளுக்கு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை கடத்திய பூனையை, பிரேசில் நாட்டு, சிறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.பிரேசில் நாட்டின் தென் கிழக்கில் உள்ளது அலகோயஸ் சிறை. இங்கு, 265 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஒரு பூனை, சிறைக்குள் இருந்து வெளியே வருவதும், போவதுமாக இருந்தது. இதை கவனித்த சிறை அதிகாரிகள், பூனையின் வயிற்று பகுதியில் ஏதோ, சில பொருட்கள் கட்டப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். பூனை சிறைக்குள் செல்லும் போது, அதை லாவகமாக பிடித்தனர். அதன் வயிற்று பகுதியில் மொபைல் போன், துளையிடும் கம்பிகள், இரும்பை அறுக்கும் ரம்பங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்டிருந்தது. சிறைக்குள் இருந்த கைதிகள், இந்த பூனையை சில பொருட்களை எடுத்து வரும் வகையில் பழக்கியுள்ளனர். இருப்பினும் பூனை கொண்டு வந்த பொருட்களை பயன்படுத்தி, கைதிகள் யாரும் தப்பித்து செல்லவில்லை. தற்போது இந்த பூனையும் சிறை வைக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.