சென்னை: ""மலேசியாவிற்கு, இவ்வாண்டு, 7 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள் வருவர் என, எதிர்பார்க்கிறோம்,'' என, மலேசியா சுற்றுலா துறை இயக்குனர் சுல்கிபிளை முகமது சையத் கூறினார். சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிப்பதற்காக, மலேசியா சுற்றுலாத்துறை மற்றும் தமிழகத்தில் உள்ள சுற்றுலா முகவர்களின் சந்திப்பு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
இதில், மலேசியா அரசு சுற்றுலாத் துறையின், தென் மேற்கு ஆசிய இயக்குனர் சுல்கிபிளை முகமது சையத் கூறியதாவது: இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு, கடந்தாண்டு, 5 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்தனர். இவ்வாண்டு, 7 லட்சம் பயணிகள் வருவர் என, எதிர்பார்க்கிறோம். இதற்காக, இம்மாதம், 18ம் தேதி வரை, டில்லி, சென்னை, மும்பை மற்றும் கோல்கட்டாவில், இந்திய சுற்றுலா முகவர்களின் சந்திப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசியா முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்த பயண திட்டங்கள் குறித்தும், அவற்றுக்கான போக்குவரத்து சலுகைகள் குறித்தும், இந்த கூட்டங்களில் விளக்கவுள்ளோம். சென்னையில் நடந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதிலிருந்தும், 200 முன்னணி பயண முகவர்கள் பங்கேற்றனர். மற்ற நாடுகளின் சுற்றுலா பயணிகளைவிட, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு, 25 சதவீதம் பயணச் செலவு குறைக்கும் வகையில், சலுகை திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில், இந்திய சினிமாக்களின் படப்பிடிப்புகள் நடத்த விரும்பினால், தேவையான சலுகைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.