சென்னை: வக்பு வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருவர், நியமனத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த, வழக்கறிஞர் அப்துல் ரகுமான் தாக்கல் செய்த மனு: வத்தலக்குண்டுவில் உள்ள, ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின், இடைக்காலக் குழுத் தலைவராக உள்ளேன். வக்பு வாரியத் தலைவராக, தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளார். வாரிய உறுப்பினராக இவரை நியமிப்பதற்கு தகுதியில்லை.
எம்.எல்.ஏ.,க்களில் இருந்து, இரண்டு பேர், வக்பு வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், முகமது ஜான், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை அமைச்சராக உள்ளார். வக்பு வாரிய சட்டப்படி, சில பிரச்னைகளில், சிறுபான்மை துறையிடம் தான், மேல்முறையீடு செய்ய வேண்டும்.
சிறுபான்மை துறை, அமைச்சரின் கீழ் வருவதால், அவரை, வக்பு வாரிய உறுப்பினராக நியமிப்பதற்கு தகுதியில்லை. எனவே, வக்பு வாரிய உறுப்பினர்களாக, தமிழ்மகன் உசேன், அமைச்சர் முகமது ஜான் ஆகியோரை, நியமித்தது சட்டவிரோதமானது.
வக்பு வாரிய தலைவராக, தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட பின், வத்தலக்குண்டு, ஜும்மா பெரிய பள்ளிவாசல் நடவடிக்கைகள், விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த விசாரணைகளை நடத்த, வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன், உறுப்பினரான, அமைச்சர் முகமது ஜான் ஆகியோருக்கு தகுதியில்லை.
எனவே, நான் தலைவராக இருக்கும், ஜும்மா பெரிய பள்ளிவாசல் தொடர்பான விசாரணையில் பங்கேற்க, வக்பு வாரிய உறுப்பினரான அமைச்சர் முகமது ஜான், வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், மற்றும் பரூக் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும். இவர்களை, வக்பு வாரிய உறுப்பினர்களாக நியமித்ததை, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.