தூத்துக்குடி: தூத்துக்குடியில், ரேஷன்கார்டில் உள்தாள் பொருத்த மறுத்த, ரேஷன்கடை ஊழியரை, ஆத்திரமடைந்த பெண், செருப்பால் அடித்தார். திருவாரூர் மாவட்டம், பாடகசேரியைச் சேர்ந்தவர் தமிழ் அழகன், 52; இவர், தூத்துக்குடி, கால்டுவெல் காலனியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நடத்தப்படும், அமுதம் சிறப்பு அங்காடியில் (ரேஷன் கடை), பட்டியல் எழுத்தராக பணிபுரிகிறார்.
உள்தாள் என்னாச்சு ? நேற்று காலை, 9:30 மணியளவில், அக்கடைக்கு, அதே பகுதியைச் சேர்ந்த உத்திரம், 50, என்ற பெண் வந்துள்ளார். தன் ரேஷன் கார்டில், உள்தாள் பொருத்திதருமாறு அவர் கேட்டுள்ளார். "அரசு உத்தரவுப்படி, பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் வழங்கப்படுவதை ஒட்டி, உள்தாள் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொங்கல் முடிந்ததும் வாருங்கள்' என, தமிழ் அழகன் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதெல்லாம் அரசின் குழப்பமான முடிவினால் தான். முதலில் உள் தாள் ஓட்ட ஆணையிட்டு, பின் மிகவும் தாமதமாக முடிவெடுத்து பொங்கல் பரிசு கொடுக்க ஆணையிட்டு, அதனால் உள் தாள் ஓட்டும் பணியை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து .... ஒரே குழப்பம். இதனால் பாதிக்கப்பட்டது நியாய விலை கடை ஊழியரே பாவம் அவர். அரசின் முடிவை ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டியிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதே?
எதற்கு தாள் ஓட்டுவது. . . . புதியதாக கொடுக்க முடியவில்லை என்றால். . .அது என்ன காரணமாக இருந்தாலும் சரி . . .மக்களை வீணாக அலைய வைப்பது / அளக்களிப்பது கண்டனத்துக்குகுரியது. . . . . . .தவறு செய்தது யார். . . . . புதிய குடும்ப அட்டை குடுக்க வேண்டியது அரசின் கடமை. . . . .புதிய அட்டை கொடுக்கும் வரை பழைய அட்டை செல்லும் என்று ஒரு அறிவிக்கை செய்ய வேண்டியது தானே . . . . . . . . .
ரேஷன் கடை ஊழியர்கள் மற்ற நேரங்களில் பொதுமக்களை அலைக்கழிக்கும்போது இப்படி செய்திருந்தால் அது மிகவும் வரவேற்கத் தகுந்ததே. ஆனால் உண்மையாகவே பொங்கல் பொருட்கள் வழங்குவதற்காக உள்தாள் ஒட்டும் பணி தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும் பொங்கல் முடிந்தவுடன் (18.01.2013) உள்தாள் ஒட்டும் பணி மீண்டும் தொடர்ந்து நடைபெறும் என்றும் அரசே அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் அதை அறியாத இப்பெண்மணி எப்போதும் ரேஷன்கடை ஊழியர்கள் இவ்வாறு அலைக்கழிப்பது போல் இப்போதும் செய்கிறார்கள் என நினைத்து போட்டு சாத்திவிட்டார். ஊழியர்களே திருந்துங்கள். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல், தவறு செய்யும்போதெல்லாம், தப்பிவிட்டீர்கள் ஆனால் இப்போது தவறே செய்யாதபோது வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டீர்கள். என்னதான் போராட்டம் நடத்தி அந்த பெண்ணுக்கு தண்டனை வாங்கித்தர முயற்சி செய்தாலும், வாங்கிய அடி வாங்கியதுதானே. காண்பிக்கும்போது, இந்த சம்பவத்தில் (அவர்மீது இதில் எந்த தவறும் இல்லாதபோது) இவரது படம் வெளியிடுவதைத் தவிர்த்திருக்கலாம். பாவம் இப்போதாவது படத்தை நீக்கிவிடுங்கள் ப்ளீஸ். ஆனால் ரேஷன் கடை ஊழியர்களே பொதுமக்கள் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். பொறுத்ததுபோதும் என பொங்கி எழுந்தால் அப்புறம் உங்க பாடு அம்பேல்தான். உடனே திருந்துங்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.