ஊட்டி: டெல்டா மாவட்ட விவசாயிகளின் நஷ்டத்தை அரசு ஈடு செய்யும் என, சிறப்பு பொங்கல் பரிசு திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
பொங்கலை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.100 உள்ளிட்ட 160 மதிப்பிலான பொங்கல் பரிசு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம், கொடநாடு ரேஷன் கடையில், இன்று துவக்கி வைத்தார்.
திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் பேசுகையில், காவரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கும். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய அனைத்து நஷ்டத்தை அரசு ஈடு செய்யும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதே எனது கொள்கை. தமிழக மக்களுக்கு எந்தவிதமான குறையும் இருக்கக்கூடாது என்பது அரசின் நோக்கம். பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என கூறினார்.
இந்த விழாவில் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்க வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வார்த்தைகள் அனைத்தும் கேட்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால், அதனை எப்போது நடைமுறை படுத்தப்போகிறீர்கள்? மற்றும், மத்திய அரசையே இன்னும் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது சரியல்ல. காரணம், தி.மு.க. அதனுடன் கூட்டணி வைத்துள்ளது அவர்களை மீறி காங்கிரஸ் ஒன்றும் செய்ய போவதில்லை என் தெரிந்தும், நீங்கள் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதுவும் செய்யாமல் விட்டீர்கள்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.