ஆவடி : கோவில் அலுவலக அறையின் பூட்டை உடைத்து, 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.
திருமுல்லைவாயில்
செந்தில்நகர், மகாத்மா காந்தி சாலையில், வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி, கோவிலில் தற்போது திருப்பணி வேலை நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு, கோவில் திருப்பணி குழுவினர், கோவில் வளாகத்தில்
உள்ள அலுவலக அறையை, பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று காலையில் வந்து
பார்த்தபோது, அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 40
ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின்படி,
திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடுகின்றனர்.
மதுரவாயலில்...
அதேபோல், மதுரவாயல் காமாட்சியம்மன் நகரில், கங்கையம்மன் கோவிலின் கதவு உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்து 5,000 ரூபாய் மற்றும்
மரப்பெட்டியில் இருந்த 2,500 ரூபாய் திருடப்
பட்டிருந்தது. இதுகுறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.