பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மனைவி இறந்த சோகம் தாங்க முடியாத கணவர் அருமைதாஸ், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பரமக்குடி அடுத்த பாம்பூர் சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் அருமைதாஸ், 37. இவரது மனைவி வனிதா, 32, ஜன.,6ம் தேதி வீட்டில் சமையல் செய்த போது, சேலையில் தீப்பிடித்தது. காயமடைந்த இவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இந்த சோகம் தாங்காத அருமைதாஸ், யாரிடமும் பேசாமல் மவுனமாக இருந்தார். நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தந்தை யாக்கூப் புகார் படி, பரமக்குடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.