சென்னை: பின்னணிப் பாடகி சின்மயி, அளித்த புகாரின் மீது, பதிவு செய்யப்பட்ட வழக்கை, ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, "சைபர் கிரைம்' போலீசாருக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
சினிமா பின்னணிப் பாடகியான சின்மயி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம், புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், "தனது சமூக வலை தளத்தில், சிலர் ஆபாசமாக பேசுகின்றனர். மிரட்டல் விடுக்கின்றனர்' என, கூறியிருந்தார்.
இதையடுத்து, சென்னை, "நிப்ட்' கல்லூரியின், இணை பேராசிரியர், சரவணகுமார், கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், கைது செய்யப்பட்டார். அவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம், பெண்களை துன்புறுத்துவதை தடுக்கும் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு, நவம்பர், 1ம் தேதி, எழும்பூர் கோர்ட், சரவணகுமாருக்கு ஜாமின் வழங்கியது. தன் மீதான வழக்கை, ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், சரவணகுமார் தாக்கல் செய்த, மனுவில் கூறியிருப்பதாவது:
சமூக நலனுடன், மனிதாபிமானத்துடன், நேர்மறையான அணுகுமுறையுடன் செயல்படுபவன். சின்மயி அளித்த புகாரின்படி, என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெண்ணை துன்புறுத்தல், மிரட்டல் எதுவும் செய்யவில்லை. என் மீதான வழக்கை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி ஆறுமுகசாமி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.பழனிமுத்து ஆஜரானார். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, "நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.