ஊட்டி : "கிராமப் பகுதிகளில் விற்கும் பொருட்களுக்கு வியாபாரிகள் உரிய பில்கள் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் நுகர்வோர் உரிமை சங்க பொதுசெயலாளர் அர்ஜூணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீலகிரி மாவட்ட கிராமப்புறங்களில் உள்ள சுற்றுலா மையங்களில், இயங்கி வரும் சிறுகடைகளில் குடிநீர்பாட்டில், குளிர்பானங்கள், கார வகைகள், பிஸ்கட் என பல பொருட்களை உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் வாங்கி செல்கின்றனர். இதற்கு பில் வழங்குவதில்லை.
கிராமப்புறங்களில் பல சிறு ஓட்டல்களிலும் தரமான உணவுகள் கிடைப்பதில்லை. எனவே, கிராமப் பகுதிகளில் விற்கும் பொருட்களுக்கு வியாபாரிகள் உரிய பில்கள் வழங்கவும், அவர்கள் பாதிக்காமலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அர்ஜூணன் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.