விருதுநகர் : ""விருதுநகரில்
நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடை ஜன., இறுதியில்
இயங்கும்,'' என, பொறுப்பு கமிஷனர் சேர்மக்கனி தெரிவித்தார்.
விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில், நகராட்சி சார்பில் எரிவாயு தகன மேடை, 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
இதன்
அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், யார் நிர்வாகிப்பது என்ற
குழப்பத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நகராட்சி பகுதியிலிலும்
கட்டப்படும் எரிவாயு தகன மேடை, அப்பகுதி தனியார் டிரஸ்ட் நிறுவனத்தால்
பாராமரிக்கப்படும்.
இதில் எரிக்கப்படும் சடலங்களுக்கு பெறப்படும்
பணத்தை கொண்டு, எரிவாயு தகன மேடையை பராமரிக்க வேண்டும். ஊழியர்களுக்கும்
சம்பளம் கொடுக்க வேண்டும். இதை நகராட்சி கமிஷனர் தலைமையில் ஒரு குழுவினர்
கண்காணித்து வருவர். இந்நிலையில், விருதுநகரில் கட்டி முடிக்கப்பட்ட
எரிவாயு தகன மேடை,தனியார் "டிரஸ்ட்' அமைப்பதில் ஏற்பட்ட கால தாமதத்தில்
,காட்சி பொருளாக உள்ளது.
பொறுப்பு கமிஷனர் சேர்மக்கனி, ""எரிவாயு தகன
மேடைக்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. இதை பராமரிக்க, தனியார்
டிரஸ்ட் நிறுவனத்தை, தற்போது தான் தேர்ந்தெடுத்துள்ளோம். ஜன., இறுதியில்
எரிவாயு தகன மேடை இயங்கும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.